يحاول ذهب - حر

மதிப்புக்கு உரிய மதிப்பு!

October 13, 2025

|

Dinamani Nagapattinam

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

- கிருங்கை சேதுபதி

விலை மதிப்பற்றது, விலை மதிக்க முடியாதது என்றெல்லாம் சொல்லுகிறோமே? அப்படியானால் என்ற பதில் கேள்வி கேட்டதும், பயன்படுத்துவதைப் பொருத்தது என்று ஒரு மாணவி கூறினார்.

அது எப்படி? தங்கத்தின் விலை மதிப்பு அதிகம். அதனோடு ஒப்பிட, தக்காளியின் விலை குறைவு. தக்காளி சாப்பாட்டுக்கு உதவும். தங்கத்தைச் சாப்பிட முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் மாணவர்.

தங்கத்தை விற்றால், தக்காளிக் கடையையே வைக்கலாம் என்று பதிலளித்தார் மற்றொருவர். சின்னத் தக்காளியின் மிகச் சிறிய விதைகூட மண்ணில் விழுந்தால் மறுபடி பல நூறு தக்காளிகளைத் தரும்; முளைக்கும். அதுபோல், தங்கம் முளைக்குமா? இத்தனைக்கும் அதுவும் மண்ணில் இருந்துதான் கிடைக்கிறது என்று மறுத்தார் மாணவி.

தலைப்பு திசைமாறுகிறது, பட்டிமன்றத்தைப்போல். தங்கமா?, தக்காளியா என்று பட்டிமன்றமா இங்கே நடத்துகிறோம்? கேள்வி என்ன? எது விலை உயர்ந்தது என்பது இல்லை. ஒரு பொருளின் முழுமதிப்பு வெளிப்படுத்துவது எப்போது என்று மற்றொருவர் தெளிவுபடுத்தினார்.

'அது பயன்படுத்துபவரின் தகுதியை, தேவையைப் பொருத்தது' என்ற பதிலும் வந்தது. பயன்படுத்தவே இல்லை என்றால், ஒரு பொருள் தன் தகுதியில் மதிப்பில் குறைந்துவிடுமா என்ன என்ற வினாவும் எழுந்தது. பயிற்சி பெறுபவர்களைக் குழுக்களாகப் பிரித்து நடத்திய வகுப்பு என்பதால், பதில் தருபவர் எவரோ, அவர் தம் குழுவில் இருந்து பலத்த கரவொலி எழும்பிவிடும். சுவையான செய்தியாக அமைந்துவிட்டால், அது குழு எல்லை கடந்து பலரது கரவொலிகளையும் பெற்றுவிடும்.

இந்தப் பதிலுக்கு அப்படி ஒரு பொதுக் கரவொலி எழுந்தது. இது பொது நிகழ்வு இல்லை; குழு உரையாடல். பொதுநிகழ்வில்போல், இதுபோன்ற குழு உரையாடலிலும் கரவொலி எழுப்பி அங்கீகரிப்பதும், பாராட்டுவதும்கூட மதிப்பைத் தருவதுதான். எவ்வளவு பேர் எவ்வளவு சப்தமாகக் கரவொலி எழுப்பினார்கள் என்பதைப் பொருத்து ஒரு கருத்தின் மதிப்பை அளவிட்டுவிட முடியாது. பலத்த கரவொலி பெறுகிற உரையைவிட, கைதட்ட மறந்து சிந்திக்க வைக்கிற உரைதான் உயர்ந்தது; பயனுள்ளது.

المزيد من القصص من Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Nagapattinam

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Nagapattinam

பிகார் 2-ஆம் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிகார் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (அக்.13) தொடங்கியது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Nagapattinam

நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் வாழ்த்து

நூற்றாண்டு காணும் தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Nagapattinam

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Nagapattinam

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Dinamani Nagapattinam

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Nagapattinam

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Nagapattinam

முதலிடத்தில் புணே

புது தில்லி, அக். 12: புரோ கபடி லீக் போட்டியின் 79-ஆவது ஆட்டத் தில், புணேரி பல்டன் 'சூப்பர் ரெய்ட்’ வாய்ப்பில் தபங் டெல்லி கே.சி.யை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Nagapattinam

வரலாறு படைத்தார் வசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size