மனிதம் சொல்லும் மரபு
July 07, 2025
|Dinamani Madurai
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். ஒரு சிறு உதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பதுபோல் நம்பிக்கை துளிர்விடும்.
வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கும்; ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுபோல நல்லவர்களும், தீயவர்களும் சேர்ந்ததுதான் இந்த உலகம். மனிதர்களில் எல்லோருமே புத்தர்களாக, உத்தமர்களாக, நீதிவான்களாக, தர்மசிந்தனை உடையவர்களாக, அறவழியில் நடப்பவர்களாக, சத்தியத்தைத் தாங்கிப்பிடிப்பவர்களாக, சமுதாய அக்கறை கொண்டவர்களாக இருப்பதில்லை.
தராசுத் தட்டுக்களைப் போல சமமாக இருக்க முடியாது. சமூக ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, எங்கு பார்த்தாலும் அடாத செயல்கள் நடப்பது போலவும், எல்லோரும் காமக் கொடூரர்களாகவும், ரத்தவெறி பிடித்து அலைபவர்வர்களாகவும் தெரிகிறார்கள். நமக்கும் மனித குலத்தின் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து வருகிறது. நம்முடன் பழகும் அனைவரும் ஆதாயத்துக்காகவும், உள்நோக்கத்துடனும்தான் பழகுகிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம்.
நாம் ஒருவருடனும் உள்ளன்புடன் பழகாமல் தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். மனசு முழுக்க கருணையையும், அன்பையும் நிரப்பிக் கொண்டு எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். சமுதாய நலனுக்காக, பொருள் நிறைந்தவர் பணத்தையும், அல்லாதவர் உடல் உழைப்பையும் நல்குகிறார்கள். பால் நினைந்தாடும் தாயைப்போல பரிவு காட்டுகிறார்கள்.
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உற்றுழி உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். பெரிய உதவி என்று இல்லை. ஒரு சிறுஉதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பது போல் அவர்களின் நம்பிக்கை துளிர்விடும்.
பசுமையைப் பார்த்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி என்பதைப்போல, பலர் செய்யும் நல்ல செயல்களைப் பார்க்கும் போது மனசுக்குள் பன்னீர் தெளித்ததைப்போல இருக்கிறது. இறுகிய பாறை நெகிழ்வது போல இதயம் நெகிழ்கிறது. சட்டென வாழ்வு இனிமையாகிறது.
பிறருக்கு உதவி செய்யும்போது, அதுதரும் ஆனந்தம் எல்லையற்றது. நாம் காட்டும் சின்னச் சின்ன அன்பில் குளிர்ந்து போகின்றன பல உள்ளங்கள். உதவி பெறுபவர்களின் முக மலர்ச்சி நம் வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.
هذه القصة من طبعة July 07, 2025 من Dinamani Madurai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Madurai
Dinamani Madurai
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Madurai
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Madurai
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Madurai
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Madurai
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Madurai
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Madurai
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Madurai
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Madurai
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Madurai
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Translate
Change font size
