يحاول ذهب - حر
தலைமை மாற்றமா, ஆட்சி மாற்றமா?
June 02, 2025
|Dinamani Madurai
2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது.
பெங்களூரு, ஜூன் 1: 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டு, 135 இடங்களுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது.
கடந்தகால மரபுப்படி கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் தனக்கே முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று டி.கே.சிவகுமார் வாதிட்டு வந்தார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுவதற்கு காரணமாக இருந்ததால், தனக்குத்தான் முதல்வர் பதவியைத் தரவேண்டும் என்று சித்தராமையா அடம்பிடித்தார்.
பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும், வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையாவை ஓரங்கட்டினால், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் டி.கே.சிவகுமாரை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.
காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக ஆட்சி நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வமாக அறிவிப்பையும் கட்சி மேலிடம் அறிவிக்கவில்லை. மாறாக, கர்நாடகத்தில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவி யேற்பார்கள் என்று மட்டும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, 2023, மே 20 ஆம் தேதி இருவரும் பதவி யேற்றுக் கொண்டனர்.
முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏதாவது செய்து கொள்ளப்பட்டதா என்று கேட்டதற்கு, 'மக்களோடு அதிகாரப் பகிர்வு செய்து கொண்டுள்ளோம்' என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அப்போது பதிலளித்திருந்தார்.
هذه القصة من طبعة June 02, 2025 من Dinamani Madurai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Madurai
Dinamani Madurai
எந்த பயங்கரவாத முகாமும் தப்ப முடியாது: இந்திய ராணுவம் திட்டவட்டம்
எல்லைக்கு அப்பால் உள்ள எந்த பயங்கரவாத முகாமும் தப்பிக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Madurai
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி
'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.
1 min
May 08, 2026
Dinamani Madurai
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Madurai
பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம்
கல்வித் துறை தகவல்
1 min
May 08, 2026
Dinamani Madurai
பணியாளர் குறைப்பில் காக்னிசன்ட், ஃபிரெஷ்வொர்க்ஸ்!
உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏ. ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.
1 min
May 08, 2026
Dinamani Madurai
100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Madurai
ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?
ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்
2 mins
May 08, 2026
Dinamani Madurai
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Madurai
சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.
1 mins
May 08, 2026
Dinamani Madurai
சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு: 22 பேர் விடுதலையை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றம்
அகமதாபாத் அருகே கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ரௌடி சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கௌசர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
May 08, 2026
Translate
Change font size
