استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!

May 13, 2025

|

Dinamani Madurai

பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அண்மையில் இந்திய குடிமைப் பணித் தேர்வு 2024-ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளிவந்தன. சுமார் 1056 பணியிடங்களுக்கான தேர்வாக அது நடந்தது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளைக் கொண்டது அத்தேர்வு. இறுதி முடிவுகளின்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏறத்தாழ 57 தேர்வர்கள் வெற்றி பெற்றனர். இது சுமார் 5.3 சதவீதம் ஆகும்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் சற்றேறக்குறைய 10 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை இருந்து வந்தது. பாடத்திட்டம் மாற்றம், தேர்வு முறையில் மாற்றம் போன்ற புதிய சூழலில் தமிழ்நாட்டின் தேர்ச்சி என்பது 3 சதவீதம் முதல் 4 சதவீதம் சரிந்தது. தற்போது 5.3 சதவீதமாக சற்றே உயர்ந்து மாற்றம் கண்டுள்ளது.

முன்பு இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்ற முதல் 100 தேர்வர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 முதல் 15 தேர்வர்கள் வரை இருப்பார்கள். தற்போது 2 அல்லது 3 தேர்வர்களே இருக்கிறார்கள். தரநிலை பின்னடைவால் 400 ஆவது இடம்பெற்று வெற்றி பெறுபவருக்குகூட ஐஏஎஸ் பணி வாய்ப்பும், 700-ஆவது இடம் பெற்று வெற்றி பெறுபவருக்கு ஐபிஎஸ் பணி வாய்ப்பும் தமிழ்நாடு ஒதுக்கீடும் கிடைக்கிறது. இது மகிழ்ச்சியோ, நல்ல மாற்றமோ அல்ல. இது நாம் தரநிலையில் பின்தங்கியுள்ளதை அறிவிக்கும் ஓர் எச்சரிக்கை மணி ஆகும்.

தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் இன்னும் உயர வேண்டிய சூழலில், தர நிலையிலும் உயர்ந்து வரவேண்டும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏனெனில், 2007 ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 31-ஆம் இடம் பெற்று ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர் பா.ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாடு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதே போல 2013-ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 33 -ஆம் இடம்பெற்று ஐஏஎஸ் பணி வாய்ப்புப்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர் கி. விஜயாவுக்கு தமிழ்நாடு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. காரணம், தர நிலையில் அவர்களுக்கு முன்னால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 முதல் 5 தேர்வர்கள் இருந்தனர் என்பதைக் கவனத்தில் கொண்டால் கடந்த கால சூழலுக்கும் இன்றைய சூழலுக்குமான உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ளலாம்.

المزيد من القصص من Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Madurai

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Madurai

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Madurai

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Madurai

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Madurai

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாடிக்கு 4,920 கன அடியாகக் குறைந்தது. எனினும், நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size