يحاول ذهب - حر
பதிப்புலகின் முன்னோடி...
November 23, 2025
|Dinamani Karur
தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
பெண் வாசகர்களால் கொண்டாடப்படும் ரமணி சந்திரனை அறிமுகப்படுத்தியது அருணோதயம். அவரது நூல்கள் இன்றும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
அருணனைப் போன்ற பழம்பெரும் பதிப்பாளர்கள்தான் பதிப்பு உலகுக்குப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்கள். சென்னைப் புத்தகக் காட்சிக்கு ஆரம்பகாலத்தில் அடித்தளமிட்டு வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
நூற்றாண்டு கண்ட இவர் சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட தேவகோட்டையில் 1924-இல் லட்சுமணன் செட்டியார்- சீதை ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
மலேசியாவில் லட்சுமணன் வணிகம் புரிந்து வந்த நிலையில், தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆதலால் அருணனின் இளமைக்காலம் சிரமமாகவே இருந்தது. தேவகோட்டை பள்ளியில் இவர் பதினோராம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
நள்ளிரவில் தேசத் தலைவர்களைக் கைது செய்த ஆங்கிலேய ஆட்சியைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் முதன்முதலாக அருணோதயம் அருணன் மேடையேறி, “மகாத்மா காந்தியை நள்ளிரவில் கோழைகள் போல் கைது செய்த ஆங்கிலேயர்களைப் பாதாளத்தில் போட்டு புதைக்கும் வரை ஓய மாட்டோம்” என்று உரத்தக் குரலில் முழக்கமிட்டார். இதனாலேயே அவர் போலீஸாரின் கவனத்துக்குரியவராக மாறிவிட்டார்.
ஆங்கிலேய எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற இருந்தபோது, அதற்கு சில நாள்களுக்கு முன்னதாகவே சின்ன அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையைச் சூழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறைக்கதவுகளை உடைத்தெறிந்து, தலைவர்களை விடுதலை செய்தனர். இதற்காக போலீஸாரால் தேடப்பட்டவர்களில் அருணனும் ஒருவர்.
هذه القصة من طبعة November 23, 2025 من Dinamani Karur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Karur
Dinamani Karur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Karur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Karur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Karur
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Karur
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Karur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Karur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Karur
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Karur
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Karur
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
