يحاول ذهب - حر
'வந்தே மாதரம்' 150...
November 07, 2025
|Dinamani Karur
இந்தியத் திருநாட்டின் வரலாற்றின் நீண்ட நெடிய ஊக்கமளிக்கும் பயணத்தில், பாடல்களும் கலைகளும் இயக்கங்களின் உணர்வாக மாறி மக்களின் உணர்வுகளை செயல்பாடாக மாற்றிய ஏராளமான தருணங்கள் இருந்துள்ளன. சத்ரபதி சிவாஜி பேரரசர் படையின் போர்ப் பாடல்களாகட்டும், சுதந்திரப் போராட்டத்தின் போது இசைக்கப்பட்ட தேசியப் பாடல்களாகட்டும், அவசரகால நிலை பிரகடனத்தின் போது இளைஞர்களின் மெல்லிசைகளாகட்டும், இந்திய சமூகத்தில் பாடல்கள் எப்போதுமே கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் தூண்டுகின்றன.
அத்தகைய பாடல்களுள் ஒன்றுதான் இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'. இதன் வரலாறு போர்க்களத்தில் தொடங்கவில்லை. மாறாக, அறிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவின் அமைதியான அதே வேளையில் உறுதியான மனதில் உதித்தது. 1875-ஆம் ஆண்டு, ஜகதாத்ரி பூஜையின் (கார்த்திகை சுக்ல நவமி அல்லது அக்ஷய நவமி) புனித நாளில், அவர் இயற்றிய ஒரு பாடல், தேச விடுதலையின் ஒருமித்த கீதமாக மாறியது. அந்தப் புனித வரிகளில், அவர் பாரதத்தின் ஆழமான நாகரிக வேர்களிலிருந்து, அதர்வண வேதத்தின் 'மாதா பூமிஹ் புத்ரோ அஹம் பிருதிவ்யா' ('பூமி எனது தாய், நான் அவரது மகன்) பிரகடனத்திலிருந்து தேவி மகாத்மியரின் தெய்வீகத் தாயின் வழிபாடு வரை உத்வேகம் பெற்றார்.
பங்கிமின் வார்த்தைகள் பிரார்த்தனையாகவும், தீர்க்கதரிசனத்துடனும் இருந்தன. 'வந்தே மாதரம்', தேசியப் பாடல் அல்லது சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாடி மட்டுமல்ல. பங்கிம் சந்திரரின் கலாசார தேசியவாதத்தின் முதல் பிரகடனமாக இருந்தது. இந்தியா என்பது புவியியல் சார்ந்த பகுதி மட்டுமல்ல என்றும், மாறாக அது புவி-கலாசார நாகரிகமாகவும், வரைபடத்தில் கோடுகளால் இணைக்கப்பட்டிருப்பதுடன், கலாசாரம், நினைவுகள், தியாகம், வீரம் மற்றும் தாய்மையைப் பகிர்ந்து கொண்டுள்ளதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது வெறும் நிலம் அல்ல; இது ஒரு தீர்த்தம்; பக்தியாலும், கடமையாலும் தூய்மைப்படுத்தப்பட்ட புனித மண்.
மகரிஷி அரவிந்தர் கூறியவாறு, இந்தியாவின் நவீன துறவியாக விளங்கிய பங்கிம், தனது வரிகள் மூலம் நாட்டு மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பினார். ஆனந்த மடம் என்ற அவரது படைப்பு, புதினம் மட்டுமின்றி, தூங்கிக் கொண்டிருந்த தேசத்தை அதன் தெய்வீக வலிமையை மீண்டும் கண்டுபிடிக்கத் தூண்டிய ஒரு மந்திரமானது.
هذه القصة من طبعة November 07, 2025 من Dinamani Karur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Karur
Dinamani Karur
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?
தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
May 06, 2026
Dinamani Karur
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Karur
மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Karur
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Karur
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி
விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Karur
விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Karur
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Karur
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Karur
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Karur
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Listen
Translate
Change font size
