يحاول ذهب - حر

வழிகாட்டும் கலாமின் கனவுத் திட்டம்!

July 26, 2025

|

Dinamani Karur

ன்று எங்கும் புதிய தலைமைத்துவத்திற்கான தேடல் நிலவுகிறது. குறிப்பாக நாட்டை வழிநடத்த, சமூகத்தை வழிநடத்த, நிறுவனத்தை வழிநடத்த, இயக்கத்தை வழிநடத்த; போரை, வன்முறையை, வன்மத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிரித்து அமைதியில்லாத சூழலுக்குத் தள்ளும் சுயநல மேதாவி தலைமைகளை நாம் நாடுகளில், சமூகங்களில் பார்த்து வருவதால் மாற்றுத் தலைமை தேவைப்படுகிறது.

- க. பழனித்துரை

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஓர் அறிவியலாளராக தொழில்நுட்பவாதியாக அரசில் செயல்பட்டு நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்த இந்திய மக்களின் மாபெரும் தலைவர். அவர் புகழப்படுவது, போற்றப்படுவது அவர் வகித்த பதவியால் அல்ல; அவர் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் கனவாலும் தான்; 'இந்தியா 2020' என்பது அவர் தயாரித்த ஒரு கனவுத் திட்டம்.

இந்தியா என்ற நாடு இருக்கிறது; அங்கு மக்கள், அரசு நிர்வாகக் கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், தொழில்சாலைகள், கல்விச் சாலைகள், விவசாயிகள், ஊடகங்கள், குடிமைச் சமூகங்கள் என அனைத்தும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இருந்தபோதும், நம் நாட்டின் விடுதலைக்கு மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் கண்ட கனவு சுதந்திரத்துக்குப் பிறகு நனவானதா என்ற கேள்வியில் இவர் தொடங்கி, இல்லை என்ற நிலையில், அதை இந்தியாவுக்கு தலைமை வகிக்கும் நாம் ஏன் செய்யக்கூடாது என்று முடிவு எடுத்து உருவாக்கியதுதான் இந்தக் கனவு 'இந்தியா 2020'.

அன்றைய சூழலில் அரசும், நிர்வாகமும், அரசியலும் உளுத்துப் போய்க் கொண்டிருப்பதை நல்லவர்கள் பார்த்து ஆதங்கப்படுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாமல் வாளா இருப்பதைக் கண்ட இவர், புதிய கனவில் இவர்களை இணைக்க முயன்றார். காரணம், இவரின் கனவு ஒரு துறைக்கானதோ அல்லது பகுதிக்கானதோ அல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கானது; நாட்டு மக்களுக்கானது.

இந்தக் கனவை நிறைவேற்ற அரசுக் கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஒட்டு மொத்த இந்தியாவும் கிளர்ந்தெழ வேண்டும்; சுதந்திரப் போராட்டத்துக்கு மக்கள் தியாகம் செய்யப் புறப்பட்டதுபோல், இந்தச் செயல்பாடுகளுக்கு தேவை தியாகம் அல்ல; நாட்டுப்பற்றுடன் தாங்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் அறப்பணியாக செய்தாலே போதுமானது. அனைத்தும் நாட்டுக்கான பணியாக மாறிவிடும்.

المزيد من القصص من Dinamani Karur

Dinamani Karur

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Karur

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size