يحاول ذهب - حر
முன்னேற்றமாகும் மாற்றம்
May 10, 2025
|Dinamani Karaikal
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
நம் தேசத்தின் சிறந்த அறிஞர்கள் கல்வியில் சிறப்பான பயிற்சியைப் பெற வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். மாநிலங்கள் அவர்களுக்கென கல்வி முறை பாடத்திட்டம் என வைத்துக் கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதையும் இணைக்கும் ஓர் பாடத்திட்டமும் அவசியம் என்பதை நமது அறிஞர்கள் சிந்தித்துள்ளனர்.
இதுவரை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் கல்விக் கொள்கை 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1992-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் கல்விக் கொள்கையில் சிறிய மாற்றங்களைச் செய்தார். மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் அறிவியல் முதலான முன்னேற்றங்களுக்கு ஏற்பவும் மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தற்போது தேசிய கல்விக் கொள்கை 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த சமுதாயமும் முன்னேறுவதற்கு கல்வி அடிப்படையானது. கல்வியின் தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு உருவாக்கப்பட்டது.
தற்போதைய கல்விக் கொள்கை உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்கள் மத்திய அரசின் கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் சில மாநிலங்கள் தங்களுக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. கொள்கை அடிப்படையில் பெரும்பாலும் மத்திய மாநில அரசுகளின் கல்விக் கொள்கைகளில் பெரிய மாறுபாடுகள் இருப்பதில்லை.
பாடங்களின் அடிப்படையிலும் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் வேறுபாடுகள் இல்லை. ஆனால், மொழிப்பாடங்கள், வரலாறு போன்றவற்றில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. மாநிலங்கள் தங்கள் தனித்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தர முயல்வதில் வேறுபாடுகள் தோன்றுகின்றன.
هذه القصة من طبعة May 10, 2025 من Dinamani Karaikal.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Karaikal
Dinamani Karaikal
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Karaikal
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Karaikal
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Karaikal
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Karaikal
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
நகரங்களைக் கைப்பற்றுங்கள்!
போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Karaikal
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Translate
Change font size
