يحاول ذهب - حر
நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடு
February 24, 2026
|Dinamani Kanyakumari
நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
-
இதுதொடர்பாக 'தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை மற்றும் உத்தி (பிரஹார்)' என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்களத்தில் உள்ளது. அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) நிலையற்ற சூழல் இருப்பதே வரலாறாக உள்ளது. இதனால் அங்கு பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதுதவிர, தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள், அரசு கொள்கையின் ஆயுதமாக பயங்கரவாதத்தை சில நேரங்களில் பயன்படுத்தியுள்ளன. எனினும் எந்தவொரு இனம், மதம், நாகரிகம் அல்லது நாட்டின் சட்டபூர்வ குடிமக்களைப் பயங்கரவாதத்துடன் இந்தியா தொடர்புபடுத்துவதில்லை.
இந்தியாவுக்கான அச்சுறுத்தல்...
நாட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள அரசின் (பாகிஸ்தான்) துணையுடன் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியா நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு நிகழ்த்தும் நடவடிக்கைகளை ஜிகாதி பயங்கரவாத அமைப்புகள், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பிற அமைப்புகள் தொடர்ந்து வருகின்றன. அல்-காய்தா, இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் ஆகிய உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் இலக்காகவும் இந்தியா உள்ளது.
வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணு ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காமல் தடுப்பது பயங்கரவாத தடுப்பு முகமைகளுக்கு சவாலாக நீடிக்கிறது. இணையவழி தாக்குதல்கள் மூலம், இந்தியாவை 'ஹேக்கர்கள்' மற்றும் தேசிய அரசுகள் தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், ட்ரோன்கள் மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை ஆபத்தான நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவது மற்றொரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு உத்தி- பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுத்தல்:
هذه القصة من طبعة February 24, 2026 من Dinamani Kanyakumari.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Kanyakumari
தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு
வட கொரிய அதிபர் உத்தரவு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அழைப்பு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Kanyakumari
பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது
எஸ்.பி.வேலுமணி தரப்பு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

