يحاول ذهب - حر
புதிய தலைமை மலர்கிறது!
October 22, 2025
|Dinamani Erode & Ooty
காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.
தங்கள் சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் எல்லையற்ற நம்பிக்கை கொண்டு செயல்படும் மாமனிதர்கள். இவர்கள் மகாத்மா காந்தியை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு, காந்தியச் செயல்பாடுகளில் வெற்றி பெற்ற மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களின் அனுபவங்களையும் பெற்று, களத்தில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வை நோக்கிச் செயல்பட முனைந்தவர்கள். இவர்கள் தங்களை நிறுவனமாக்கிக் கொள்ளாமல் செயல்களுக்கான இயக்கமாக தங்களை வடிவமைத்துக் கொண்டு செயல்படும் இளைஞர்கள்.
காந்தியச் செயல்பாடுகள் தேக்கமடைவதுபோல் இன்று ஓர் உரையாடல் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்களின் வரவு காந்தியச் செயல்பாடுகளுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது. இவர்கள் உண்மையான காந்திய தியாக தீபங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்கள் செய்த பணிகளைப் புதுப்பித்து, செயல்களில் கரைந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்புலம் என்பது இவர்களின் சமூகச் செயல்பாடுகள் மட்டும்தான்.
இவர்கள் தங்கள் செயல்களின் மூலம் தவிர்க்கப்பட முடியாத மனிதர்களாக, சமூகம் தேடும் மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இவர்களின் தனிச் சிறப்பு. சென் புத்தமதத் துறவிகளைப்போல் சாதாரண மனிதர்களாகவே தங்களைக் காட்டிக் கொண்டு, மற்றவர்கள் செய்ய இயலாத செயல்களையெல்லாம் எடுத்துச் செயல்பட்டு வெற்றிபெறச் செய்கிறார்கள். அந்நியப்பட்டுப்போன மக்களுக்கு இவர்களின் செயல்களெல்லாம் இறைச் செயலாகவே தோன்றுகின்றன. இவர்களின் தனித்துவம் மக்களுடன் இருப்பது, இணைந்து செயல்படுவது.
இவர்களில் சிலர் காந்திய வேர்களைத் தொடர்ந்து நாடிச் சென்று, அதைத்தேடிக் கண்டறிந்து அதற்கு புத்துயிர் ஊட்டி புது வடிவம் தந்து செயல்படுகின்றனர். இவற்றைப் பார்த்த நமக்கு காந்தியத்தை செயல்களால் உயர்த்தும் உயர்சக்தி இவர்களிடம் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இவர்களின் செயலைப் பார்க்கும்போது இவர்களைத்தான் விவேகானந்தர் தேடினாரோ, இவர்கள்தான் மகாத்மா காந்தி தயார் செய்ய எண்ணிய நிர்மாண ஊழியர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
هذه القصة من طبعة October 22, 2025 من Dinamani Erode & Ooty.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
நுண் நிதி நிறுவனங்களுக்கான (எம்எஃப்ஐ) கடன் உத்தரவாத திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவில் இணைந்தார்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Erode & Ooty
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Erode & Ooty
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Erode & Ooty
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Listen
Translate
Change font size

