يحاول ذهب - حر
தத்தளிப்பில் நேபாளம்!
September 15, 2025
|Dinamani Erode & Ooty
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.
-
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன. போராட்டக்காரர்களின் வன்முறையில் உச்சநீதிமன்றக் கட்டடமும் தப்பவில்லை. யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப், எக்ஸ் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்கு கடந்த செப். 4-ஆம் தேதி நேபாள அரசு தடை விதித்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மேற்கூறிய செயலிகள் பதிவு செய்யப்படாததால், அவற்றைத் தடை செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கி சமூக வலைதளங்களைத் தணிக்கைக்கு உள்படுத்தவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக தகவல் பரவி அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.
அரசின் தடைக்கு எதிராக ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் கடந்த 8-ஆம் தேதி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தலைநகர் காத்மாண்டு உள்பட பல்வேறு நகரங்களில் பெருந்திரளான இளைஞர்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியும் முழக்கமிட்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். போராட்டத்துக்கு 'ஜென் இசட்' (1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள்) தலைமுறையினரின் போராட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
هذه القصة من طبعة September 15, 2025 من Dinamani Erode & Ooty.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Erode & Ooty
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Erode & Ooty
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Erode & Ooty
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Erode & Ooty
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Erode & Ooty
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Erode & Ooty
தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 mins
November 01, 2025
Dinamani Erode & Ooty
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Erode & Ooty
நிதி எழுப்பும் கேள்வி!
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
2 mins
October 31, 2025
Dinamani Erode & Ooty
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Translate
Change font size

