يحاول ذهب - حر

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

June 20, 2025

|

Dinamani Dindigul & Theni

பொதுவாகவே தவறான தகவல்கள், போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் தன்மையுடையவை. சமூக ஊடகங்கள் இந்தச் சூழலை இன்னும் இரட்டிப்பாக்குகின்றன. அசலைக் காட்டிலும் போலிக்கு வலிமை அதிகம். இப்படிப்பட்ட தவறான தகவல்கள் மனதில் இனம்புரியாத ஓர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

டும்பத்தினருடன் அண்மையில் வெளிமாவட்டத்துக்கு சென்றபோது இணைய இடர்ப்பாடு ஏற்பட்டு 'கூகுள் மேப்' கைவிட்ட நிலையில், வாகனத்தை நிறுத்தி வழி கேட்டோம். ஒரு நபர் நம்பிக்கையுடன் நம்மிடம் பேசி, தீர்மானமாக ஒரு திசையை சுட்டி வழி காட்டினார். அவர் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தபோது மாற்றுப் பாதையில் வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதன்பிறகு, மற்றொரு நபரிடம் வழிகேட்டோம். முதல் நபர் சொன்ன பாதைக்கு நேர்மாறான எதிர்பாதையில் செல்லுமாறு அவர் வழிகாட்டினார். முதல் நபர் அத்தனை தீர்மானமாகச் சொன்னாரே, தற்போது யார் காட்டிய திசையில் செல்வது என்று உள்ளுக்குள் பெரும் குழப்பம். மூன்றாவது நபர் ஒருவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று அவரிடம் விசாரித்ததில் இரண்டாம் நபர் சொன்ன பாதையை அவர் வழிமொழிந்து அந்தப் பாதையை தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

முதல் நபர் தவறாக வழிகாட்டியதால் நேரம் வீணாகிவிட்டதே என்று கவலை கொண்டாலும் தனக்கு நூறு சதவீதம் உறுதியாக தெரியாத ஒரு தகவலை, அவர் ஏன் அத்தனை தீர்மானமாக இருந்து வழி சொன்னார் என்ற கேள்வி நீண்ட நேரம் மனதைக் குடைந்தது.

ஒரு தவறான தகவல் எத்தனை வகையான அசௌகர்யங்களை ஏற்படுத்திவிடுகின்றன! ஒரு மனிதர் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவர் பகிர்ந்தவை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம் மனம் நம்பியதே பொய்த்துப் போகும் சூழ்நிலையில், யார் சொன்னது, எவர் சொன்னது என்று சிறிதளவும் தெரியாத ஒரு தகவலை எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வலிமையாகத் தோன்றியது.

சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் பெரும் பங்கு வகித்துவிட்ட இந்த நவீன யுகத்தில், நம்மைத் தொடர்புகொள்ள, தகவல்களைப் பகிர, செய்திகளைத் தெரிந்து கொள்ள எனப் பல்வேறு தேவைகளை அவை பூர்த்திசெய்கின்றன; எனினும், ஏராளமான தவறான தகவல்களும் கட்டுக்கதை களான செய்திகளும் வலம்வருகின்றன. சுமார் 70 சதவீதம் அளவுக்கு தவறான தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தங்களுக்கு வந்துசேரும் ஒரு தகவல் உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் தொடர்ந்து பகிர்கின்றனர். அதனால் சில நேரங்களில் நம் மீது இருக்கும் நம்பகத்தன்மைகூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. நாம் இப்படி பொதுவெளியில் பகிரும் நம்பகமற்ற தகவல்களினால் மறைமுகமாக சில பிரச்னைகள் முளைகின்றன என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்?

المزيد من القصص من Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்

'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Dindigul & Theni

இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!

குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்

time to read

1 mins

December 03, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Dindigul & Theni

வீட்டுக் கூரைகளில் சூரியமின் உற்பத்தி இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.5,780 கோடி கடன்

வீடுகள், கட்டடங்களில் மேற்பகுதியில் சூரியமின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதை மேலும் துரிதப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு ரூ.5,780 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Dindigul & Theni

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Dindigul & Theni

கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dindigul & Theni

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Translate

Share

-
+

Change font size