மாணவ மாணிக்கங்கள்!
July 04, 2025
|Dinamani Dharmapuri
நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நம் சிந்தனையை உயர்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க முடியும்.
பள்ளி மாணவர்களுக்கான ஒரு பயிற்சி முகாம். நடைபெற்ற இடம்: மாற்றுத் திறனாளிகளை தன்மானமிக்க திறனாளிகளாக உருவாக்கும் திருக்கோயிலாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு தவச்சாலை. மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வு அளிக்கும் இரண்டு மாமனிதர்களால் நடத்தப்படும் வேள்வி. அதைச் சென்று பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த இரண்டு மாமனிதர்களும் வாழும் தெய்வங்கள் என்று வணங்க வைக்கும் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர் துணையின்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத இரண்டு மனிதர்களும் கர்மயோகிகளாகச் செயல்பட்டு நம்பிக்கை ஒளியை அனைவருக்கும் தருகின்றார்கள்.
அந்த இடத்தில்தான் இந்த மாணவர்களுக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமில் பள்ளி மாணவர்கள் 85 பேர் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் நானும் உரையாட வருகிறேன் என்று மத்திய, மாநில அரசுகளில் அரசுச் செயலராக பணிபுரிந்த ஓர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்த அதிகாரியும் வந்திருந்தார்.
இந்த முகாமில் அனைத்து வசதிகளுக்கான செயல்களையும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்தினர். அடுத்து, கருத்துரை அனைத்தையும் உரையாடல்களாகவே வடிவமைத்து அந்த மாணவர்களின் உள் திறனை அவர்களுக்குக் காண்பித்தது முகாமின் மற்றொரு சிறப்பு.
இந்த மாணவர்களின் செயல்களைப் பார்த்த அந்த ஓய்வுபெற்ற அரசுச் செயலர், இவர்கள் என்னுடன் கேள்வி கேட்டு உரையாடட்டும் என்று கூறி, ஓட்டுமொத்த வகுப்பையும் கேள்வி-பதிலாக மாற்றிவிட்டார். முதல் அமர்வில் அவர்களிடம் உரையாடலைத் தொடங்கியவர் பல கேள்விகளை முன்வைத்தார். அதில் முதல் கேள்வி, நாம் வாழும் உலகம் இன்று மிகவும் சிறப்பாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறதா?
هذه القصة من طبعة July 04, 2025 من Dinamani Dharmapuri.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Dharmapuri
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

