இரட்டைப் பெருமை!
October 31, 2025
|Dinamani Cuddalore
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
-
குரூப் சுற்றில் இந்திய ஆடவர் அணி வங்கதேசம் (83-19), இலங்கை (89-16), பாகிஸ்தான் (81-26), ஈரான் (46-29), பஹ்ரைன் (84-20), தாய்லாந்து (85-30) ஆகிய அணிகளையும், இந்திய மகளிர் அணி வங்கதேசம் (46-18), தாய்லாந்து (70-23), இலங்கை (73-10), ஈரான் (59-26) ஆகிய அணிகளையும் வீழ்த்தின. இறுதிச் சுற்றில் ஆடவர் அணி கடும் போட்டியை எதிர்கொண்டு ஈரானை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது என்றால், மகளிர் அணி 75-21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை எளிதாக வெற்றி கண்டது.
தொடர் முழுவதும் ஐந்து போட்டிகளில் இந்திய மகளிர் அணி 89 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 312 புள்ளிகளைப் பெற்றது. இந்திய ஆடவர் அணி ஈரானைத் தவிர மற்ற ஐந்து அணிகளுக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் வித்தியாசத்தைப் பார்த்தாலேயே இந்தப் போட்டியில் இந்திய அணிகளின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம்.
இந்திய ஆடவர் அணியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் இடம் பெற்றதும், மகளிர் அணியில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகா துணை கேப்டனாக விளையாடியதும் தமிழகத்துக்கு கிடைத்த தனிப்பட்ட பெருமை. இருவருமே சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்த இமாலய சாதனையை எட்டிப் பிடித்து, இளம் கபடி வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றனர்.
هذه القصة من طبعة October 31, 2025 من Dinamani Cuddalore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Cuddalore
Dinamani Cuddalore
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு
பாமகவில் விருப்ப மனு பெறும் கால அவகாசம் டிச.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Listen
Translate
Change font size

