يحاول ذهب - حر
மாறும் உலகில்... மாறாத போர்கள்...
July 12, 2025
|Dinamani Coimbatore
மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டே நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.
உலகின் தற்கால நிகழ்வுகள் குறித்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறைமை மடிந்துவிட்டனவா? இல்லை புதிதாக ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்படவே இல்லையா? நாம் இன்னும் கற்கால உலகில்தான் இருக்கிறோமா? இல்லையென்றால் 17, 18-ஆம் நூற்றாண்டில் இருந்த பழைய நிலைக்குத் திரும்புகிறோமா? என்பவைதான் அவை.
இப்போது 5 கண்டங்களில் ஒரே நேரத்தில் சண்டை நடைபெறுவதை உலகம் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பைச் சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட செயலால் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதுதவிர, கடந்த 30 ஆண்டுகளாக சீனா பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு பெரிய மோதலை நடத்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா பூமியைத் துளைத்து தாக்கும் குண்டுகளை வீசியுள்ளது.
ஐரோப்பாவில் அச்சு இயந்திரத்தின் வருகை அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவை மனித நேய இயக்கங்களுக்கு வலுவூட்டின. அந்தக் காலகட்டத்தில் எழுந்த நவீன சிந்தனைகளைப் போன்ற எழுச்சி இப்போதும் இந்த நேரத்திலும் நமக்கு அவசியமாகிறது.
1648-ஆம் ஆண்டு வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் ஐரோப்பாவில் நீடித்து வந்த '30 ஆண்டு போர்' மற்றும் '80 ஆண்டு போர்' ஆகியவை முடிவுக்கு வந்தன. இதன்பிறகு, 17-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரான்ஸ் தலைமை அமைச்சரான கார்டினல் டி ரிச்செலியூ ஒவ்வொரு நாடும் அதனதன் தேச நலன்களுக்காக மட்டும் செயல்படுவது என்ற கருத்தை முன்வைத்தார். இது மோதல்களைத் தவிர்க்க வழிவகுத்ததுடன், அதிகாரச் சமநிலை, நாடுகள் இடையே ஒத்துழைப்பு, கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க முதல்படியாக அமைந்தது.
பின்னர், இது டச்சு நாட்டைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலரும் பல்துறை வல்லுநருமான ஹ்யூகோ க்ரோடியஸால் புதிய கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.
هذه القصة من طبعة July 12, 2025 من Dinamani Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்
இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
April 27, 2026
Dinamani Coimbatore
தமிழக மக்களை பெருமைப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி: பாஜக
'மனதில் குரல்' உரை மூலம் தமிழக மக்களை பிரதமர் நரேந்திர மோடி பெருமைப்படுத்தி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
1 min
April 27, 2026
Dinamani Coimbatore
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான 38-ஆவது ஆட்டம் டையில் முடிந்தது.
1 min
April 27, 2026
Dinamani Coimbatore
இந்திய மகளிருக்கு முதல் வெற்றி
தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் வெற்றியை பெற்றது.
1 min
April 27, 2026
Dinamani Coimbatore
மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
April 27, 2026
Dinamani Coimbatore
தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்
தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min
April 27, 2026
Dinamani Coimbatore
உலகை இணைக்கும் நடனம்
பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும்.
2 mins
April 26, 2026
Dinamani Coimbatore
தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!
நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாதஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி . . இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது.
2 mins
April 26, 2026
Dinamani Coimbatore
ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
April 26, 2026
Dinamani Coimbatore
கட்சி மாறிய 7 எம்.பி.க்கள்: தகுதி நீக்கம் கோர ஆம் ஆத்மி முடிவு
ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம். பி. க்கள் 7 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அந்த அவையின் தலைவருக்குக் கடிதம் எழுதவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
April 26, 2026
Translate
Change font size

