يحاول ذهب - حر
மாறும் உலகில்... மாறாத போர்கள்...
July 12, 2025
|Dinamani Coimbatore
மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டே நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.
உலகின் தற்கால நிகழ்வுகள் குறித்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறைமை மடிந்துவிட்டனவா? இல்லை புதிதாக ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்படவே இல்லையா? நாம் இன்னும் கற்கால உலகில்தான் இருக்கிறோமா? இல்லையென்றால் 17, 18-ஆம் நூற்றாண்டில் இருந்த பழைய நிலைக்குத் திரும்புகிறோமா? என்பவைதான் அவை.
இப்போது 5 கண்டங்களில் ஒரே நேரத்தில் சண்டை நடைபெறுவதை உலகம் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பைச் சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட செயலால் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதுதவிர, கடந்த 30 ஆண்டுகளாக சீனா பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு பெரிய மோதலை நடத்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா பூமியைத் துளைத்து தாக்கும் குண்டுகளை வீசியுள்ளது.
ஐரோப்பாவில் அச்சு இயந்திரத்தின் வருகை அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவை மனித நேய இயக்கங்களுக்கு வலுவூட்டின. அந்தக் காலகட்டத்தில் எழுந்த நவீன சிந்தனைகளைப் போன்ற எழுச்சி இப்போதும் இந்த நேரத்திலும் நமக்கு அவசியமாகிறது.
1648-ஆம் ஆண்டு வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் ஐரோப்பாவில் நீடித்து வந்த '30 ஆண்டு போர்' மற்றும் '80 ஆண்டு போர்' ஆகியவை முடிவுக்கு வந்தன. இதன்பிறகு, 17-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரான்ஸ் தலைமை அமைச்சரான கார்டினல் டி ரிச்செலியூ ஒவ்வொரு நாடும் அதனதன் தேச நலன்களுக்காக மட்டும் செயல்படுவது என்ற கருத்தை முன்வைத்தார். இது மோதல்களைத் தவிர்க்க வழிவகுத்ததுடன், அதிகாரச் சமநிலை, நாடுகள் இடையே ஒத்துழைப்பு, கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க முதல்படியாக அமைந்தது.
பின்னர், இது டச்சு நாட்டைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலரும் பல்துறை வல்லுநருமான ஹ்யூகோ க்ரோடியஸால் புதிய கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.
هذه القصة من طبعة July 12, 2025 من Dinamani Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Coimbatore
Dinamani Coimbatore
சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Coimbatore
சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
2 mins
April 23, 2026
Dinamani Coimbatore
வங்கதேசத்தை வென்றது இலங்கை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
1 min
April 23, 2026
Dinamani Coimbatore
மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 23, 2026
Dinamani Coimbatore
வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்
மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.
1 min
April 23, 2026
Dinamani Coimbatore
சர்வதேச போதைப் பொருள் வழக்கில் தலைமறைவு நபர் திருச்சியில் கைது
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த நபர், சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்தபோது, திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
1 min
April 23, 2026
Dinamani Coimbatore
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.
2 mins
April 23, 2026
Dinamani Coimbatore
பிரதமரை விமர்சித்த விவகாரம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Coimbatore
மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீர்களா?: மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் மத்திய படை வீரர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
April 23, 2026
Dinamani Coimbatore
நின்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 13 பேர் காயம்
கோவில்பட்டி புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
1 min
April 23, 2026
Translate
Change font size

