يحاول ذهب - حر
மாணவ மாணிக்கங்கள்!
July 04, 2025
|Dinamani Chennai
நாம் யாருக்கும் பாரமாக வாழாமல் உயர்ந்த சிந்தனையை உருவாக்கிச் செயல்பட வேண்டும். இன்று நம் நாட்டில் அனைத்தும் இருந்தும் சுயநல சிந்தனைதான் நம்மை சிதிலமடைய வைக்கிறது. அதை மாற்ற நம் சிந்தனையை உயர்வாக்கிச் செயல்படுவதன் மூலம்தான் எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க முடியும்.
பள்ளி மாணவர்களுக்கான ஒரு பயிற்சி முகாம். நடைபெற்ற இடம் மாற்றுத் திறனாளிகளை தன்மானமிக்க திறனாளிகளாக உருவாக்கும் திருக்கோயிலாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம். தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்துக்கு அருகே அமைந்துள்ள ஒரு தவச்சாலை.
மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வளிக்கும் இரண்டு மாமனிதர்களால் நடத்தப்படும் வேள்வி. அதைச் சென்று பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த இரண்டு மாமனிதர்களும் வாழும் தெய்வங்கள் என்று வணங்க வைக்கும் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள். மற்றவர் துணையின்றி எந்தச் செயலையும் செய்ய இயலாத இரண்டு மனிதர்களும் கர்மயோகிகளாகச் செயல்பட்டு நம்பிக்கை ஒளியை அனைவருக்கும் தருகின்றார்கள்.
அந்த இடத்தில்தான் இந்த மாணவர்களுக்கு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமில் பள்ளி மாணவர்கள் 85 பேர் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் நானும் உரையாட வருகிறேன் என்று மத்திய, மாநில அரசுகளில் அரசுச் செயலராக பணிபுரிந்த ஓர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்த அதிகாரியும் வந்திருந்தார்.
இந்த முகாமில் அனைத்து வசதிகளுக்கான செயல்களையும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்தினர். அடுத்து, கருத்துரைஅனைத்தையும்உரையாடல்களாகவே வடிவமைத்து அந்த மாணவர்களின் உள் திறனை அவர்களுக்குக் காண்பித்தது முகாமின் மற்றொரு சிறப்பு.
இந்த மாணவர்களின் செயல்களைப் பார்த்த அந்த ஓய்வுபெற்ற அரசுச் செயலர், இவர்கள் என்னுடன் கேள்வி கேட்டு உரையாடட்டும் என்று கூறி, ஒட்டுமொத்தவகுப்பையும் கேள்வி-பதிலாக மாற்றிவிட்டார். முதல் அமர்வில் அவர்களிடம் உரையாடலைத் தொடங்கியவர் பல கேள்விகளை முன்வைத்தார். அதில் முதல் கேள்வி, நாம் வாழும் உலகம் இன்று மிகவும் சிறப்பாக, அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறதா?
சற்றும் தாமதிக்காமல் இல்லை என்று பதில் தந்தனர். அதற்கு என்ன செய்வது? மறு கேள்வி. அடுத்த பதில், அதை மாற்ற வேண்டும். யார் மாற்றுவது? அதற்கும் உடனே, நாம்தான் என்ற பதில். எப்படி? உடனே தலைமை ஏற்க வேண்டும்.
هذه القصة من طبعة July 04, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
இயக்குநர் நியமனம் ஓராண்டாக காத்திருக்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை
தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் பதவிக்கு கடந்த ஓராண்டாகியும் எவரும் நியமிக்கப்படாததால் கூடுதல் பொறுப்பாக அப்பணிகளை ஐஏஎஸ் அதிகாரியே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
சேவைத் துறையில் குஜராத் முன்னிலை வகிக்க உகந்த தருணம்
அமைச்சர் அமித் ஷா
1 min
May 18, 2026
Dinamani Chennai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
அரசு மருத்துவமனையில் கையூட்டு எம்எல்ஏ புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் கையூட்டு பெற்ற 4 பணியாளர்கள் மீது, தொகுதி எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
1 mins
May 18, 2026
Dinamani Chennai
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு
பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (எரிவாயு) விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Chennai
பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
2 mins
May 18, 2026
Dinamani Chennai
உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க முதல்வர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலர் துரை. ரவிகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
1 min
May 18, 2026
Translate
Change font size
