தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.276 கோடியை மத்திய அரசு விடு வித்துள்ளது.
கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை விடுவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளையும், பிற மாவட்டங்களையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் தாக்கியது. இதைத் தொடர்ந்து, வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமழை பெய்தது. இதில் தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு தமிழகத்தில் புயல், மழை சேதங்களைப் பார்வையிட்டது.
இதையடுத்து, தில்லி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தற்காலிக தீர்வு மற்றும் நிரந்தர தீர்வுகளுக்காக ரூ.19,692 கோடி நிவாரண நிதி கோரினார். பின்னர், கடந்த ஜனவரி மாதமும் மத்திய குழு தென் மாவட்டங்ளைப் பார்வையிட்டது. அதன்பிறகு தமிழக எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சரை சந்தித்து ரூ.37,907 கோடி நிவாரண நிதி கோரியது.
இந்நிலையில், தற்போது பேரிடர் நிவாரணப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.285.54 கோடியை ஒதுக்க மத்திய உள்துறையின் உயர்நிலைக் குழு பரிந்துரை செய்தது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிதமிஞ்சிய மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.397.13 கோடியை விடுவிக்கவும் மத்திய உள்துறையின் உயர்நிலைக் குழு பரிந்துரைத்தது. அந்த வகையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியாக மொத்தம் ரூ.682.67 கோடி தமிழகத்துக்கு ஒதுக்க பரிந்துரைத்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة April 28, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 28, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்
‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது; எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி
தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.
10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி
பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 79.11சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 89.14 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 280 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?
சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி
ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா
இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க பிரதமர் : நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் பிரசாரத்தின் போது கேட்டுக்கொண்டார்.