يحاول ذهب - حر
பாமக எம்எல்ஏக்கள் இருவருக்கு அடுத்தடுத்து ‘திடீர்’ நெஞ்சுவலி
June 19, 2025
|Dinakaran Nagercoil
பாமக பொதுக் குழுவை சேலத்தில் அன்புமணி தரப்பு இன்று கூட்டும் நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் இருவருக்கு அடுத்தடுத்து திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவம் னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சி தொண்டர்கள் மத் தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-

பாமக தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட் டத்தில் இருந்தே மோதல் தொடங்கிவிட்டது. தனது பேரன் முகுந் தனை பாமகவின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தந்தை மகனுக்கிடையிலான மோதல் மேடையிலேயே அம்பலமாகியது.
இதைத்தொடர்ந்து, அன்புமணியை கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். உடனடி யாக, தானே தலைவராகத் தொடர்வேன் என்றும் அன்புமணி அறிவித்தார். பின்னர், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீதும், அவரின் மனைவி சவுமியா மீதும் சரமாரியான குற்றச்சாட் டுகளை ராமதாஸ் முன் வைத்து வருகிறார். தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று ராமதாஸ் அறிவித்து இருக்கிறார்.
இதனால், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும், இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்ட தட்ட இரண்டு அணிகளாக செயல் பட்டு வருகிறது. பாமகவின் தலைவரான அன்புமணி பின்னால், 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே போன்று மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களின் ஆதரவும் அன்புமணிக்கே இருக்கிறது என்றும் சொல்கின்றனர்.
ராமதாஸ் இதுவரை சுமார் 73 மாவட்ட செயலாளர்கள், 57 மாவட்ட தலைவர்களை நீக்கியுள்ளார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்ற முறையில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு தனக்கு அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறுகிறார். ஆனால், அவர் நீக்கிய நிர்வாகிகளை அன்புமணி மீண்டும் நியமித்து வருகிறார்.
هذه القصة من طبعة June 19, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
October 14, 2025
Dinakaran Nagercoil
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min
October 14, 2025
Translate
Change font size