استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

July 04, 2025

|

DINACHEITHI - TRICHY

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்- 48" போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.5.2022 அன்று சட்டப்பேரவை விதி எண் 110 கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதாரத் தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல, நகர்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் படி முதல்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 6.6.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. மேலும், அடையாறு, சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.

المزيد من القصص من DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:

time to read

1 mins

January 22, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம் ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்

time to read

1 mins

January 22, 2026

DINACHEITHI - TRICHY

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

கள்ளக்குறிச்சி அருகே திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

January 21, 2026

DINACHEITHI - TRICHY

மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

time to read

1 min

January 20, 2026

DINACHEITHI - TRICHY

குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 20, 2026

DINACHEITHI - TRICHY

ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை

ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 19, 2026

Translate

Share

-
+

Change font size