يحاول ذهب - حر
மாப்பிள்ளை மரியாதை கிடைக்கவில்லை கழுத்தை நெரித்து மனைவி படுகொலை
June 30, 2025
|DINACHEITHI - TRICHY
பிணத்துடன் பதுங்கிய கணவர் கைது
-
கன்னியாகுமரி,ஜூன்.30குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வின் (வயது 46). தொழிலாளியான இவருடைய மனைவி பபிதா நித்ய செல்வி (39). இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் என்ற மகனும், 7 வயதில் டிக்ஸ்மெரின் என்ற மகனும் உள்ளனர். கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் தங்கியபடி பென்குரூஸ் படித்து வந்தான். இந்தநிலையில் டிக்ஸ்மெரின் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளான். இதனால் டார்வினும், பபிதா நித்ய செல்வி ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை டார்வின் வீடு பூட்டியே கிடந்துள்ளது. இரவான நிலையிலும் விளக்கு எதுவும் அந்த வீட்டில் எரியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பபிதா நித்ய செல்வி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். கணவர் டார்வின் ஒருவித பதற்றத்துடன் இருந்துள்ளார். இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் டார்வினை பிடித்து போலீசார் விசாரித்த போது, மனைவியை அவரே கொன்று விட்டு மாலை வரை பிணத்துடன் வீட்டிலேயே பதுங்கியிருந்தது தெரியவந்தது. அதிகாலையில் கணவன், மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டார்வின், பபிதா நித்ய செல்வியை கழுத்தை நெரித்தும், துணியால் கழுத்தை இறுக்கியும் கொன்றுள்ளார். ஆத்திரத்தில் மனைவியை கொன்று விட்டோமே, இனி வெளியே சென்றால் போலீசார் பிடித்து விடுவார்களே என்ற அச்சம் டார்வினுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்குள்ளேயே மனைவி பிணத்துடன் காலையில் இருந்து மாலை வரை இருந்துள்ளார். அந்த சமயத்தில் பித்து பிடித்ததை போன்று அங்குமிங்குமாக நடந்துள்ளார். கொலையை மறைத்து விடலாமா? என்ற எண்ண ஓட்டமும் அவருக்கு தோன்றியது. இதனால் இரவு நேரத்தில் மனைவி உடலை எடுத்துச் சென்று மறைவான பகுதியில் வீசி விடலாம் என்ற எண்ணத்தில் புலம்பியிருக்கலாம் என தெரிகிறது.
هذه القصة من طبعة June 30, 2025 من DINACHEITHI - TRICHY.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 22, 2026
DINACHEITHI - TRICHY
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:
1 mins
January 22, 2026
DINACHEITHI - TRICHY
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம் ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
1 mins
January 22, 2026
DINACHEITHI - TRICHY
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
கள்ளக்குறிச்சி அருகே திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
January 20, 2026
DINACHEITHI - TRICHY
குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
1 min
January 20, 2026
DINACHEITHI - TRICHY
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
Translate
Change font size

