يحاول ذهب - حر
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு...
June 17, 2025
|DINACHEITHI - NELLAI
ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
-
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம். எல். ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி. குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி. வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவத்தில் காவல் துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகவில்லை. அதனால், வழக்கை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி முன்னால் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
هذه القصة من طبعة June 17, 2025 من DINACHEITHI - NELLAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - NELLAI
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு
டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
February 28, 2026
DINACHEITHI - NELLAI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - NELLAI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது
1 min
February 27, 2026
DINACHEITHI - NELLAI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - NELLAI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
Translate
Change font size

