நடக்கக்கூடாதது நடைபெறாமல் இருக்க கடும் உத்தரவுகள் தேவை..
July 06, 2025
|DINACHEITHI - NAGAI
எந்தவித அநீதிக்கும் சால்ஜாப்பு சொல்வதோ, சமாளிக்க நினைப்பதோ அந்த அநீதியை ஆதரிப்பதாகிவிடும். அரசுத் துறையினரால் மக்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளை பெரும்பாலான அரசுகள் சமாதானம் கோரி தட்டிக் கழிக்கின்றன, அல்லது தள்ளிப் போடுகின்றன. ஆனால் திருப்புவனம் அருகே நடந்த காவல் மரணத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை, 'அக்கிரமக்காரர்கள் பக்கம் அரசு என்றுமே நிற்காது' என்ற நிம்மதியே மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
-
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் விசாரணையின் போது மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 போலீசார் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும், அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையும் உடனே வழங்கப்பட்டது.
மொபைல்போன் மூலம் அஜித்குமார் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அஜித் குமாரின் தாயாரிடம் பேசுகையில், 'ரொம்ப 'சாரி'மா. தைரியமா இருங்கள். சீரியசா 'ஆக்சன்' எடுக்க சொல்லியுள்ளேன்.' என்றார். தொடர்ந்து அஜித்குமார் சகோதரரிடம் பேசியவர், 'தம்பி, நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமா இருங்கள். என்ன பண்ணணுமோ அமைச்சரிடம் சொல்லி செய்ய சொல்லியுள்ளேன். நடந்ததை யாராலும் ஏற்க முடியாது. ஒத்துக்க முடியாது. தண்டனை பெற்றுத் தருவோம்,' எனக் கூறினார்.
هذه القصة من طبعة July 06, 2025 من DINACHEITHI - NAGAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - NAGAI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - NAGAI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - NAGAI
உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
1 mins
December 19, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - NAGAI
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 18, 2025
DINACHEITHI - NAGAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - NAGAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
விரிவாக்கம் திட்டத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
December 13, 2025
Translate
Change font size

