உலக வங்கியின் 190 மில்லியன் டாலர் வங்கி கடன் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்
June 11, 2025
|DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று (10.06.2025) சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் ஆற்றிய உரை :- உலக வங்கியின் சென்னை குளோபல் பிசினஸ் மையத்தை திறந்து வைக்கின்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், பெருமையும் எனக்கு தருகிறது.
-
உலக வங்கியுடன் நம்முடைய Partnership 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டில், புது டெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள். செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு உதவி செய்து, வேகமான மற்றும் வலுவான ஒருங்கிணைப்புக்கும் வழி ஏற்படுத்தி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவுடனான உலக வங்கியின் உறவை இந்த அலுவலகம் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
உலக வங்கியுடனான நம்முடைய இந்த நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் பட்டியிலிட விரும்புகிறேன்.
1980-ஆம் ஆண்டு மற்றும் 1990-ஆம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் 'தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்' மற்றும் 2004-ஆம் ஆண்டிலும் 2010-ஆம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம். இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்தத் துறைகளில் இந்தியாவிற்கே லீடர் என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது. அடுத்து, வறுமையை ஒழித்து ஊரகமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உழவர்களுக்கு நிலைத்த சமுதாயக் கட்டமைப்புகளையும் இந்தத் திட்டம் உருவாக்கி தந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு தரவை நான் சொல்ல விரும்புகிறேன்.
هذه القصة من طبعة June 11, 2025 من DINACHEITHI - KOVAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - KOVAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - KOVAI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - KOVAI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
Translate
Change font size

