يحاول ذهب - حر
அமைச்சர்களை குறி வைக்கும் அமலாக்கத்துறை ஐ.பி. செய்த சம்பவம்!
August 20-22,2025
|Nakkheeran
தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர், சீனியர், தென் மாவட்டத்தில் தி.மு.க.வின் முக்கிய புள்ளி மற்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் அமைச்சர் ஐ.பெரியசாமி. ரெய்டு எனும் பெயரில் அவரை அசைத்துப் பார்த்தால், வரும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு சாதகமாக இருக்கும் என்கிற அரசியல் கணக்குடன் சனிக்கிழமையன்று அமலாக்கத்துறையை ஏவியது ஒன்றிய அரசு. எதிர்பார்த்த ஒன்று தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி அமைதியாய் இருந்த நிலையில், எதிர்பார்த்த எதுவுமே கிடைக்காததால் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பிய அமலாக்கத்துறைக்கு சிரித்துக்கொண்டே கைகுலுக்கி வழியனுப்பி வைத்துள்ளார் அவர். அரசியல் வரலாற்றில், ரெய்டுக்கு வந்தவர்களை கைகுலுக்கி வழியனுப்பி வைத்த சம்பவம், எதிர்த்தரப்பினரையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கடந்த 16ஆம் தேதி, சனிக்கிழமையன்று, காலை சுமார் 7 மணியளவில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஐ.பெரியசாமியை குறிவைத்து, அவருக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனையை ஆரம்பித்தது அமலாக்கத் துறை. திண்டுக்கல் துரைராஜ் நகர் இரண்டாவது தெருவிலுள்ள அமைச்சர் பெரியசாமி வீடு, சீலப்பாடியிலுள்ள அமைச்சர் பெரியசாமியின் மகனும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீடு, திண்டுக்கல் வள்ளலார் நகரிலுள்ள அவரது மகள் இந்திராணி வீடு, செம்பட்டி - வத்தலகுண்டு சாலையிலுள்ள இளைய மகன் பிரபுவுக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில், மருமகனின் 'இனப்' மில், சென்னை கிரீன் வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் பெரியசாமியின் அரசு பங்களா மற்றும் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.எல்.ஏ. செந்தில்குமார் வீடு ஆகிய இடங்கள் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. அனைத்து இடங்களிலும் செல்போன் ஜாமர்கள் பொருத்தப்பட்ட நிலையில் சோதனைகள் நடந்தன.
பெரியசாமி மற்றும் செந்தில்குமாரின் சென்னை இல்லத்தில் சில அறைகளுக்கு பூட்டிற்கான சாவி கிடைக்காத நிலையில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை சோதனையிட்டு, கொண்டுவந்த ஜெராக்ஸ் இயந்திரங்கள் மூலம் தங்களுக்கான காகிதங்களை ஜெராக்ஸ் எடுத்தனர். இதே வேளையில் திண்டுக்கல்லிலுள்ள அமைச்சர் வீட்டின் முன்பு குவிந்த கட்சித் தொண்டர்கள் அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷம் போட, "அவங்க வேலையை பார்க்க வந்திருக்காங்க. நம்மால் அவங்களுக்கு எந்த இடைஞ்சலும் கூடாது” என அமைச்சர் பெரியசாமி தொண்டர்களிடம் கோரிக்கை வைக்க, அமைதியானார்கள். இருந்தாலும் அங்கிருந்து நகராமல் வாசல் முன்புறத்தில் அந்த தெரு முழுவதும் நாற்காலி போட்டு உட்கர்ந்தனர். மறுபக்கம் ஒட்டுமொத்த மாநகராட்சி கவுன்சிலர்களும் அங்கு வந்து, 'நாங்களும் அண்ணன் கூட இருக்கின்றோம்' என அங்கேயே அமர்ந்தனர்.
هذه القصة من طبعة August 20-22,2025 من Nakkheeran.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Nakkheeran
Nakkheeran
கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!
\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"
3 mins
May 02-05, 2026
Nakkheeran
திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பெரும் பலம்!
ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.
1 mins
May 02-05, 2026
Nakkheeran
விவசாயிகளுக்கு வஞ்சனை!
விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.
3 mins
May 02-05, 2026
Nakkheeran
இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
வார் ரூம்
(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!
3 mins
May 02-05, 2026
Nakkheeran
சீட் தேறுமா? விஜய் யாகம்!
2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!
தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?
ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?
முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.
3 mins
May 02-05, 2026
Translate
Change font size
