கட்சியின் ஊடகத் தொடர்புகளைக் கையாள கட்சிக்கு வெளியே இருந்து ஆளை நியமித்துப் பார்க்கும் உத்தியை தமிழ்நாட்டில் அவர்களே 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி ஆழம் பார்த்தவர்கள்.
2014 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாமகவுக்கு என்று ஊடகங்களில் இருந்த கசப்பான தோற்றத்தை மாற்றி அமைத்ததும் ஓர் ஊடகக்காரரின் நிறுவனம்தான். பத்திரிகை முதலாளிகளை நேருக்கு நேராக அன்புமணியிடம் அமர வைத்து உரையாடல், அதுவரை பாமக செய்திகளையே போடாமல் இருந்து வந்த ஒரு செய்தித்தாளை இந்த நேர்ப்பேச்சின் மூலம் சரிக்கட்டியது உள்பட்ட பல பிம்ப உருவாக்க நிகழ்வுகள் செய்யப்பட்டன. மக்களிடம் வாக்கு வாங்குவதைவிட அன்புமணி திறமையானவர் என்ற பிம்பத்தைக் கட்டமைப்போம் என்று தொடங்கப்பட்டது அந்நடவடிக்கைகள். 2014 இல் அன்புமணி எம்பி ஆகவும் ஆனார். அதன் பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்துடன் காதில் வயர்லெஸ் மைக்குடன் மேடையில் தனி ஒருவனாகத்தோன்றி ‘நம்ம சின்ன அய்யா' பொளந்து கட்டினார். இதற்கெல்லாம் முறையான ரிகர்சல்கள் அவர்களின் குடும்ப நிகழ்வுகளில் பார்க்கப்பட்டு பின்னர் அவர் மேடை ஏறினார்.
இதே காலத்தில்தான் முக ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பயணத்தையும் ஊர் ஊராக நடத்தி மக்களைச் சந்தித்தார். இதுவும் ஒரு குழுவினரால் திட்டமிடப்பட்டதே.
அப்போது கலைஞர் அவதானிப்புத் திறனோடு இருந்த காலம். அப்போது நடந்த நிகழ்வு ஒன்றை நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்தார். இந்த பயணத்துக்காக ஒரு மாதிரி நிகழ்ச்சியை ஓரிடத்தில் திட்டமிட்டனர். ஒத்திகை என வைத்துக்கொள்ளலாம். மாணவர்களுடன் முக ஸ்டாலின் சந்திப்பு. காமிராக்கள் சகிதம் எல்லோரும் கிளம்பிப்போய்விட்டனர். கலைஞரிடம் இருந்து இதன் தொழில்நுட்பப்பணியில் இருந்தவருக்கு தொலைபேசி அழைப்பு. ‘என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?'
‘அய்யா... மாணவர்களுடன் தளபதி சந்திப்பு நிகழ்ச்சி..'
‘அங்கே மாணவரணி இருக்காங்களா?'
‘இல்லீங்க..'
‘உடனே எல்லோரும் திரும்பி வந்திடுங்க' என்று அவர் உத்தரவு போட்டிருக்கிறார். இது அந்தக் காலம் என அவர் பெருமூச்சு விட்டார்.
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.