‘8250 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்த ஒரு கோடி ரூபாய் வரையில் செலவாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை அந்த தொ.கா.வுக்கு கொடுத்தது யார்.. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? தி.மு.க.வின் பொய் பிரசாரத்தில் அந்த தொ.கா.வும் ஓர் அங்கமா?' என சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி. கருத்துக் கணிப்புகளைக் கண்டு அரசியல் கட்சிகள் மிரளுவதற்கு இந்தச் சம்பவம், ஒரு சோறு பதம்.
- இந்தியாவில் ஜனநாயகத் திருவிழாவாக தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் காலம் வந்துவிட்டாலே கருத்துக்கணிப்புகளுக்கு கால் முளைத்துவிடுகிறது. இந்தியாவில் 1957 - ல் இரண்டாவது பொதுத்தேர்தல் நடந்தபோது டி காஸ்டா என்பவர் நடத்தியதுதான் நம் நாட்டைப் பொறுத்தவரை முதல் தேர்தல் கருத்துக்கணிப்பு.
அந்த கணிப்பின் முடிவுகள் சரியாகவே அமைந்திருந்தன. இதைத் தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகள் அணிவகுக்கத் தொடங்கின. ஆனால், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1980ம் ஆண்டு பொதுத் தேர்தலில் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கவனம் ஈர்த்தன. பிரனாய் ராய், அசோக் லகிரி, டேவிட் பட்லர் ஆகியோர் எடுத்த கருத்துக்கணிப்புகள் பெரிதும் கவனிக்கப்பட்டன. 1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்புகள் பிரதான இடம் பிடித்தன.
இதன் தொடர்ச்சியாக, கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வதற்காக பல தனியார் நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களோடு ஊடக நிறுவனங்களும் இணைந்து கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் செலுத்தின. சர்வே ஏஜென்சிகளுக்கு செலவு செய்ய முடியாத பத்திரிகை நிறுவனங்கள், தங்கள் நிறுவன ஊழியர்களை வைத்து கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டன.
ஒருவேளை கருத்துக்கணிப்பு முடிவுகள் காலை வாரினாலும், ‘யாருக்கு வெற்றி?' என வாசகர்களிடம் போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கின. தற்போது சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால், யூட்யூபர்களும் தங்கள் பங்குக்கு கருத்துக்கணிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். எப்படிப் பார்த்தாலும் ‘யார் மனசுல யாரு' என்ற ஆர்வத்தை வெளிக்கொண்டு வருவது, தேர்தல் சித்து விளையாட்டுகளின் ஓர் அங்கம். தேர்தல் பந்தயத்தில் அரசியல் கட்சிகளுக்கும் இது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.