அவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்படுவதற்கு அந்தப் பெண்மணி செய்த ஒரே தவறு, இந்துத்துவா மதவெறியை தன்னால் முடிந்தவரை தீவிரமாக எதிர்த்தது. அவர் பெயர் கெளரி லங்கேஷ். பெங்களூரில் சொந்தமாக பத்திரிகை நடத்தி வந்த பெண் போராளி, இலக்கியவாதி மற்றும் பத்திரிகையாளர்.
1962 இல் பெங்களூரில் பிறந்த கெளரி, 1980 இல் ஒரு ஆங்கில ஊடகத்தில் தன்னுடைய பத்திரிகையாளர் பணியைத் தொடங்கினார். 2000 ஆவது ஆண்டு பத்திரிகையாளரும், கவிஞருமான அவருடைய தந்தை லங்கேஷின் மறைவுக்குப் பெங்களூரில் பணியாற்றி வந்தார். அப்போது தான், கௌரி ''பத்திரிகா' என்றொரு பத்திரிகை நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வாசகர் கட்டணத்தை வைத்தே அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
கெளரி தொடக்கம் முதலே இடதுசாரி சிந்தனை கொண்டவர். அவர் நினைத்திருந்தால், ஒரு வசதியான வளமான வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர் தன் தந்தையின் வழியைப் பின்பற்றி, அநீதிக்கு எதிராக போராடும், முற்கள் நிறைந்த கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். தவறு செய்வது நாட்டின் பிரதமரே ஆனாலும், தயக்கமே இன்றி தட்டிக் கேட்ட கௌரி, கட்சி பாகுபாடின்றி கண் முன்னால் நடக்கும் அநியாயங்களை, தன் பேனாவின் கூர்முனையால் குத்திக் கிழித்தார்.
" மதவெறி என்பது ஒரு போதை மருந்தைப் போல எப்படி மக்களின் மனதில் விதைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள. தனக்கு யார் என்றே தெரியாத ஒரு பெண்ணை கொலை செய்யும் அளவிற்கு மதத்தின் பெயரால் அவர்களின் மூளை மழுங்கடிப்படுகிறது. இன்னும் கூறப்போனால், மதவெறி என்பது இரத்தத்தில் கலந்த நஞ்சு. அது ஒருநாள் கொண்டவரையே அழிக்கும்"
Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.