திருமணம் என்பது இருவேறு குடும்பங்கள், பழக்க வழக்கங்கள், மனிதர்கள் என அனைவரும் ஒன்றாக சங்கமித்து வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் தாங்கி நின்று, கொண்டாட வேண்டிய உறவுகளை ஏற்படுத்தும் ஒன்றாகும்.
திருமணத்தின் புனிதமான பிணைப்பானது இரு நபர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் இணைக்கிறது. பல ஆண்டுகளாக திருமண சடங்குகள் மற்றும் மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
என்ன தான் காலங்கள் மற்றும் கலாச்சாரம் மாறினாலும் நாட்டில் இன்னும் திருமணப்பந்தத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்திய சமுதாயத்தை பொறுத்தவரை என்றுமே காதல் திருமணங்களை விட பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்படும் திருமணங்களே இன்றளவும் சிறந்ததாக கருதப்படுகின்றன.
அதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 80 85 விழுக்காடு மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் இந்தியாவில் வெகுசிலரே கலாச்சார வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், குடும்பத்தினருடன் உடன்படாமல் காதல் திருமணத்தை தேர்வு செய்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. காதல் திருமணங்களை விட பெற்றோரால் செய்து வைக்கப்படும் திருமணங்கள் ஏன் சிறந்ததாக இருக்க கூடும் என்பதற்கான சில காரணங்களையும் ஆய்வின் முடிவில் பட்டியலிட்டுள்ளார்கள்.
பெற்றோர் மற்றும் பெரியவர்கள் முடிவு செய்து திருமணம் நடத்தி வைத்துள்ளதால் தம்பதியர் இருவருக்கும் இயல்பாகவே ஒரு பொறுப்புணர்வு இருக்கும். பெரியவர்கள் மனம் புண்படாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் இருக்கும். பெற்றோர்களுக்கு சங்கடம் தரும் வகையில் எதையும் செய்ய தயக்கம் இருக்கும்.
மேலும் காதல் திருமணத்தில் இருப்பதை விட தம்பதியருக்குக்கிடையே மரியாதை இருக்கும்.
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.
வாழ்வியலும் பொருளியலும்!
மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.
துளியில் நிறைந்த கடல்!
இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.