ஸ்வல்பார்டு... ஆர்க்டிக் பெருங்கடலில் அறுபது சதவீதம் பனியாலும், உறைந்துபோன பனிக்கட்டிகளாலும், அடர்ந்த மலைத்தொடர்களாலும் நிறைந்த ஒரு தீவுக்கூட்டத்தின் பெயர் இது.
உலக வரைபடத்தின் விளிம்பில் துருவப் பகுதியிலுள்ள இந்தத் தீவுக்கூட்டம் நார்வே நாட்டிற்குச் சொந்தமானது. ஸ்பிட்ஸ்பெர்ஜென், நார்டாஸ்ட்லேண்டட், எட்ஜ் ஆகிய மூன்று தீவுகள் அடங்கிய இந்த தீவுக்கூட்டம், உலகின் பொக்கிஷங்களில் ஒன்று என்றால் அது மிகையல்ல. இதற்கு நிறைய காரணங்களும் இருக்கின்றன.
ஆம். இங்குதான் உலகின் உன்னதமான பயிர் பன்முகத்தன்மைக்கான பாதுகாப்புப் பெட்டகம் உள்ளது. தவிர, ஆர்க்டிக் பிரதேசங்களை ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடம், துருவக் கரடிகள், துருவ இரவு, நள்ளிரவு சூரியன் உள்ளிட்ட பல்வேறு ஆச்சரியங்களும் நிரம்பியுள்ளன. அத்துடன் கியாகிங், ஸ்நோமொபைல் எனப்படும் பனிவண்டி பயணம், நாய்கள் வண்டியை இழுத்துச் செல்லும் சஃபாரி உள்ளிட்டவை இருக்கின்றன. இதனாலேயே பல ஆண்டுகளாக இது சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது.
சரி, அதென்ன உலகின் பயிர் பன்முகத்தன்மை?
அதைப் பற்றி பார்க்கும்முன் இந்தத் தீவுக்கூட்டத்தைப் பற்றி இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம். இந்தத் தீவுக்கூட்டத்தில் ஸ்பிட்ஸ்பெர்ஜென் தீவே பெரியது. இதில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர்.
2023ன் கணக்குப்படி இங்கு மொத்தம் 2 ஆயிரத்து 530 பேர்கள் வாழ்கின்றனர்.இதில், நார்வேயர்கள், ஜெர்மானியர்கள், ரஷ்யர்கள், போலந்துக்காரர்கள், ஸ்வீடன்காரர்கள், டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவர்கள். இதில் பலர் நிலக்கரிச் சுரங்க வேலைக்காக வந்து செட்டிலானவர்கள்.
இந்தத் தீவுக்கூட்டத்தினை 1596ம் ஆண்டு டச்சுக்காரர் வில்லெம் பேரண்ட்ஸ் முதலில் கண்டறிந்தார். பிறகு, 1604ம் ஆண்டு பிரிட்டிஷ் கப்பல் இந்தத் தீவிற்கு வந்து அங்குள்ள வால்ரஸ் எனப்படும் பனிக்கடல் யானைகளை வேட்டையாடியது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீவிற்கு அவர்கள் பயணம் மேற்கொண்டு வில் தலை திமிங்கலங்களை (Bowhead Whale) வேட்டையாடினர். இது தனித்துவிடப்பட்ட தீவு என்பதால் பிரிட்டிஷ், டேனிஷ், டச்சு, பிரஞ்சு எனப் பல நாட்டினரும் உரிமை கொண்டாடினர்.
This story is from the 26-04-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 26-04-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ரூ.2 கோடி வேண்டாம்!
நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மானேஜர்களை விட்டு ஏதாவது ஓடிடி தளத்தில் பேசச் சொல்வதுதான்.
ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்.!
இட்லியை குறுக்குவாக்கில் இரண்டு ஸ்லைஸ் ஆக வெட்டி கன்னத்தில் ஒட்டிவைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு கொழுகொழு கன்னங்களோடும் அழகாய் உருட்டிப் பேசும் கண்களோடும் நடித்து அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
விஜய் 69ல் ஹெச். வினோத்?
‘‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்’ என கமல் எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்துச் சென்ற ஹெச். வினோத், இப்போது ‘விஜய் 69’ படத்தை இயக்கப் போவதாக செய்திகள் கசிகின்றன.
சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!
‘தமிழ்’, ‘சாமி”, ‘ஐயா’, ‘தாமிர பரணி', 'சிங்கம்', 'யானை' என பல வெற்றிப் படங்களைத் தந்த முன்னணி இயக்குநரான ஹரி, இப்போது மூன்றாவது முறை யாக விஷாலுடன் இணைந்து ‘ரத்னம்' படத்தை இயக்கியுள்ளார்.
திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா
நடிகர் தீனாவிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ‘கைதி’ படம் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தவர். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் முத்திரை பதித்தவர். இப்போது காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், டயலாக் ரைட்டராகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் வெளியான ‘கள்வன்’ திரைப்படம் ஒரு நடிகராக தீனாவை இன்னும் கவனிக்க வைத்திருக்கிறது.
உலகின் விதைப் பெட்டகம்!
24 மணிநேரமும் சூரியன் இருக்கும் இத்தீவில்தான் உலகின் 13 லட்சம் பயிர் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன!
இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?
‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி
உன்னை விட இந்த உல -கத்தில் ஒசந்தது யாரும் இல்ல...' என்ற 'விருமாண்டி' பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் மத்தாப்பாக வந்து போகும் அசத்தல் அழகி அபிராமி.
மகாபலிபுரம் to சென்னை...
நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.
2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!
ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான்.