அப்போ குமாரசாமி ராஜா முதலமைச்சர். மாநிலம் முழுக்க அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறு அவுன்ஸ்தான் ஒரு குடும்பத்துக்கு அரிசி தரமுடியும்னு குமாரசாமி ராஜா சொல்லிட்டார். தி.மு.க. தலைவர் அண்ணாவோ, திராவிட நாடு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு எங்கள் ஆதரவென்று சொன்னார். வட தமிழ்நாட்டில் காமன்வீல் கட்சியென எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயகர்னு ரெண்டு பேர் நடத்திகிட்டிருந்த கட்சி. அவங்க அண்ணாவோட அறிவிப்பை ஏற்றுக்கொள்வதா கையெழுத்து போட்டுத் தந்தாங்க.
காங்கிரஸ் கட்சி தரப்பில பிரச்சாரம் செஞ்சவங்க, எங்களுக்கு வாக்கு அளிக்கலைனா நாடு சிதறுண்டு போகும்னு பேசினாங்க. காங்கிரசுக்கு எதிர்ப்பா இருந்தவங்க, ஆறு அவுன்ஸ் கட்சிக்கா வாக்களிக்கப் போறீங்கனு பிரச்சாரம் செய்தாங்க. பெரியாரோ காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கணும்னு பேசினார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் ஆதரவு தந்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாரும் அப்போ சிறையில இருந்தாங்க.
அப்போ ஆந்திரப் பகுதி நம்ம சென்னை மாகாணத்தோடதான் இருந்தது. ஆந்திர மாநிலக் கோரிக்கைக்காக பெரிய போராட்டம் நடந்துகிட்டிருந்தது. அந்த சமயம் அந்தப் பகுதிக்குப் பிரச்சாரத்துக்குப் போனாரு, ராஜாஜி. அவர் மேல தார் வீசினாங்க. அவர் சொன்னாரு, ‘ தாரினால் ஒரு மாநிலம் கிடைக்குமானால் என் மீது தாரை வீசுங்கள். தார் வீச்சை நான் தாங்கிகிட்டா உங்களுக்கு தனி மாநிலம் கிடைச்சிடுமா'ன்னு கேட்டார்.
பெரியாருடைய விடுதலை ஏட்டுக்காக அப்போது சென்னையில் பணியாற்றினேன். ஐயாவுடைய கூட்டங்களில் அதிகமாகக் கலந்து கிட்டு அவருடைய பேச்சை செய்தியாக்குவேன். அவர்கூடவே தங்கியிருந்தேன். மௌண்ட் ரோடு, மீரான் சாகிபு தெரு வீட்டுல இருந்து சிந்தாதிரிப்பேட்டை, பாலகிருஷ்ண பிள்ளைத் தெருவில விடுதலை அலுவலகம் அப்போது... கை ரிக்ஷாவில் அவர் ஏறிப்போவார். என் தோள் மீது கைவச்சுதான் ஏறுவார். அவர் பின்னாடியே சைக்கிள்ளயே போயி அவர் இறங்கும்போது அங்க இருப்பேன்.
அடுத்து, 1957 தேர்தல்
Esta historia es de la edición March 24 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 24 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.