தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நீடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிக பட்சமாக 20 செ.மீ. வரை மழை பெய்யும். இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு 'அலர்ட்' விடப்பட்டுள்ளது. மேலும் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி வரை 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Bu hikaye Maalai Express dergisinin May 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin May 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு தமிழ்
தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்க விழா
விநாயகாமிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ்துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் வாரம் தொடக்கவிழா நடைபெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவை மகிழ்ச்சியாக உண்கிறோம் - தென்காசி மாவட்ட பயனாளிகள் புகழாரம்
\"உறுபசியும் செறுபகையும் ஓவாப்பிணியும் சேராது இயல்வது நாடு\"-குறள் 734 என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
ஆந்திராவில் 2 லாரிகள் மோதியதில் 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் இருந்து மீனவர்களை ஏற்றி கொண்டு பந்துமல்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அதே வழியில் வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி அதை முந்தி செல்ல முயற்சித்தது. அப்போது எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதியது.
20ந்தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் அரசு அமைத்துள்ளது.
மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
புதுவையில் போதை பொருள் தடுப்பு அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
புதுவையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டி.ஐ.ஜி., மற்றும் சீனியர் எஸ்.பி.,க்களுடன் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரிக்கு ரூ.100 கோடி கடன் உதவி மத்திய நிதி அமைச்சரிடம் பாஜக எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரிக்கு ரூ.100கோடி கடனை முன்னுரிமை அளித்து விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.