Denemek ALTIN - Özgür
தமிழில் மட்டுமே பேசுவோம்!
Dinamani Tiruvallur
|October 28, 2025
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
கூடுதலாக, ‘தமிழை பிற சொற்கள் கலப்பின்றி பேசுங்கள் என்பதையும், தமிழில் எழுதிப் பழகுங்கள், படியுங்கள்' என்பதையும் சொன்னேன். அந்த வேண்டுகோளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போதைய இராக், சிரியா, துருக்கி தேசங்களின் சில பகுதிகளுக்கு முந்தைய பெயர், மெசபடோமியா. மிகத் தொன்மையான நாகரிகம் பிறந்த இடம். அந்த மக்கள் அப்போது பேசிய மொழி, சுமேரியா. இப்போது அந்த மொழி வழக்கில் இல்லை.
ரோமாபுரி பெரும் பேரரசு; அதுவும் மிகத் தொன்மையான நாகரிகம் கொண்டது. அந்த மக்கள் பேசியது, லத்தீன் மொழி. தற்காலத்தில் சில லத்தீன் சொற்கள் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது. வேர்ச் சொற்களாக இருக்கிறது. சில மத நிகழ்ச்சிகளில் உச்சரிக்கப்படுகிறது. மற்றபடி லத்தீன் மொழியும் பேச ஆளில்லாமல் தற்போது பேச்சு வழக்கில் இல்லை.
அதேபோல தொன்மையான பல கிரேக்க மொழிகள் வழக்கொழிந்து விட்டன. சீனாவில் ஒரு காலத்தில் பலராலும் பேசப்பட்ட மன்சு மொழி பேசுபவர்கள் இப்போது மிகக் குறைவு. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனிய தீவில் புழக்கத்தில் இருந்த அனைத்து மொழிகளும் ஆங்கிலேயர் காலனி ஆட்சி செய்த போது அழிந்துவிட்டன.
யுனெஸ்கோவின் கணக்குப்படி தற்போது உலகின் பல பகுதிகளில் மொத்தம் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. அதே யுனெஸ்கோவின் கணிப்புப்படி இவற்றில் 40% அதாவது, 2,800 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. பேசுபவர்கள் இல்லாமல் போக, அந்த மொழிகள் காணாமல் போய்விட்டன.
அந்த 40 சதவீதத்தில் தமிழ் வராமல் இருக்க வேண்டும். இது என்ன அதிசயம்! நாம் தமிழில் பேசிக் கொண்டு தானே இருக்கிறோம்? என்று சிலர் யோசிக்கலாம். ‘நான் சொல்வது ரைட்டு தானே? நீங்க அக்ரி பண்ணலையா? சம் பீப்பிள் வில் நாட் அக்ரி. தட் இஸ் ஓகே' என்பது போலத்தான் தற்போது தமிழில் பலரும் பேசுகிறார்கள்.
அவர்கள் பேசுவது தமிழ் இல்லை; ஆனால், ‘கஞ்சி குடிப்பதற்கு இலார். அதன் காரணங்களும் இன்னதென்று அறியார்' என்று பாரதியார் பாடியதைப் போல, தாங்கள் பேசுவது தமிழ் இல்லை என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மற்ற மொழிச் சொற்கள் கலவாமல் அவர்களால் தமிழ் பேசவே முடியாது. மற்ற மொழிகளில் முதன்மையானது மட்டும்தான் ஆங்கிலம். எனவே, ஆங்கிலம் தவிர சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டுமல்ல; இன்னும் சில பிற மொழிச் சொற்களும் தாராளமாக தமிழ் பேசுபவர்களிடம் கலந்திருக்கின்றன.
Bu hikaye Dinamani Tiruvallur dergisinin October 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvallur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tiruvallur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
கல்லறைத் தோட்டங்கள்-கபர்ஸ்தான் அமைக்க உத்தரவு கடிதங்கள்
முதல்வர் வழங்கினார்
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvallur
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்
திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நவ.4ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tiruvallur
பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையில் ஈடுபடும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள், தங்களுக்கு உரிய பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
November 02, 2025
Listen
Translate
Change font size
