Denemek ALTIN - Özgür
தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?
Dinamani Pudukkottai
|May 26, 2025
சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தனித்துப் போட்டி என்ற சீமானின் அறிவிப்பு பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
பி.ஜெபலின் ஜான்
சென்னை, மே 25: சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தனித்துப் போட்டி என்ற சீமானின் அறிவிப்பு பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
கோவை கொடிசியா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் தேசிய இன எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில், 2026 பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என சீமான் அறிவித்தார். நாம் தமிழர் கட்சிக்கு இதுவரை கிடைத்த வாக்குகள் என்னவாகும் என்பதை இதுவரை அந்தக் கட்சி சந்தித்த தேர்தல்களின் முடிவுகளைப் பார்த்தால் முழுமையாக அறியலாம்.
2016 பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் மக்கள் ஈர்ப்பு மிக்க ஆளுமைகளை மையப்படுத்தி நடந்த தேர்தலில் சீமானால் 1.13 சதவீத வாக்கு வங்கியைத்தான் பெற முடிந்தது. திமுக, ஒரு சதவீத வாக்கு வங்கி வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது.
இரு பெரும் ஆளுமைகள் மறைந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் மோடி, ராகுல் காந்தி என்ற இரு பிரதமர் வேட்பாளர்கள், பண பலம், ஜாதி பலம், அதிகார பலம் கொண்ட மத்திய, மாநிலக் கட்சிகளின் கூட்டணி, ஆளும்கட்சிக் கூட்டணிகளுக்கு எதிலும் சளைக்காத எதிர்க்கட்சிகள் கூட்டணி, மிகப் பெரிய திரையுலக நட்சத்திரமான கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், ஜெயலலிதா, சசிகலாவிடம் அரசியல் பயின்ற டி.டி.வி.தினகரனின் அமமுக தனியாகக் களம் கண்டது போன்றவற்றால் பண பலம், அதிகார பலம் இல்லாத சீமானின் கட்சி நிச்சயம் காணாமல் போய்விடும் என்ற விமர்சனம் எழுந்தது.
அவற்றைப் புறந்தள்ளும் வகையில் தனித்துக் களம் கண்ட நா.த.க., 3.87 சதவீத வாக்குகள் பெற்று தனது வாக்கு வங்கியை மும்மடங்கு பெருக்கிக்கொண்டது, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
Bu hikaye Dinamani Pudukkottai dergisinin May 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Pudukkottai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
