Denemek ALTIN - Özgür
தன்கர் ராஜிநாமா: எதிர்க்கட்சிகள் கேள்வி
Dinamani Nagapattinam
|July 23, 2025
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
-
புது தில்லி, ஜூலை 22:
இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜகதீப் தன்கர் (74), நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (திங்கள்கிழமை), தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு அவர் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில், 'மருத்துவர்களின் ஆலோசனையின்படி, உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக குடியரசு துணைத்தலைவர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவின்கீழ், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதை மேற்கொண்டுள்ளேன்' என்று குறிப்பிட்டார்.
அறிவிக்கை வெளியீடு: ஜகதீப் தன்கர் ராஜிநாமா தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன் கையொப்பமிட்ட அந்த அறிவிக்கையில், 'பொது தகவலுக்காக குடியரசு துணைத் தலைவரின் ராஜிநாமா குறித்த தகவல் வெளியிடப்படுகிறது' என்று குறிப்பிட்டு, அவரின் ராஜிநாமா கடிதம் இடம்பெற்றுள்ளது.
மாநிலங்களவையில் தகவல்: முன்னதாக, இந்த அறிவிக்கை குறித்து மாநிலங்களவையில்தகவல் தெரிவிக்கப்பட்டது. கேள்வி நேரத்துக்காக மாநிலங்களவை பகல் 12 மணிக்கு கூடியபோது, இந்த அறிவிக்கை குறித்து அவையை வழிநடத்திய கன்ஷியாம் திவாரி உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.
மாநிலங்களவையின் தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் இருப்பதால், இந்த அறிவிக்கை குறித்த தகவல் முறைப்படி அவை யில் தெரிவிக்கப்பட்டது.
Bu hikaye Dinamani Nagapattinam dergisinin July 23, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Translate
Change font size
