Denemek ALTIN - Özgür
இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா!
Dinamani Nagapattinam
|July 06, 2025
கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்பு அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.
முனைவர் ம.பெ.சீனிவாசன்
இந்த வகையில் பாரியின் மறைவுக்காக கபிலரும், பாரி மகளிரும், அதியமானஞ்சிக்காக ஒளவையும் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் புகழ்மிக்கவை; இன்றும் நம் கண்களில் நீர் சுரக்க வைப்பவை.
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையு முடையேம்; எம் குன்றும் பிறர்கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (112)
பாரி மகளிர் தந்தையையும் தமக்குரிய மலையையும் இழந்து செயலற்று ஏங்கிப் பாடுதலின் இது கையறு நிலையாயிற்று. இந்த அவலத்துக்கு இடையிலும் வஞ்சனையால் வென்ற மூவேந்தரை, 'வென்று எறி முரசின் வேந்தர்' என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
ஏனையோர்க்கெல்லாம், 'இனியன்' ஆகிய பாரி மூவேந்தர்க்கு மட்டும் 'இன்னான்' (வேண்டாதவன்) ஆனது எப்படியோ? என்னும் கபிலரின் கூற்றிலும் இவ்வெள்ளல் குறிப்பே எதிரொலிக்கின்றது.
அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே (115:5-6) என்பன அவரின் பாடலடிகள்.
இவ்வாறே அதியமானஞ்சியின் மறைவுச் செய்தி கேட்டதும், இல்லாகியரோ காலை மாலை! அல்லாகியர் யான் வாழும் நாளே! (232) என்னும் ஒளவையின் பாடலில் ஒலிக்கும் அவலத்தையும் அளவிட்டுச் சொல்லவியலாது.
மேலும், 'சிறியகட்பெரினே' (233) எனத் தொடங்கும் பாடலில், இனிப் பாடுநரும் இல்லை; பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி முடிப்பது அதியமான் நெடுமான் அஞ்சியின் வள்ளன்மை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளமாகவே உள்ளது.
Bu hikaye Dinamani Nagapattinam dergisinin July 06, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Translate
Change font size
