Denemek ALTIN - Özgür

சம்ஸ்கிருதத்தில் 'பொன்னியின் செல்வன்'

Dinamani Cuddalore

|

August 17, 2025

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சம்ஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அறிந்த இவர், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பெங்களூரில் உள்ள பூர்ண பிரஜ்னா சம்ஸ்கிருத மந்திரம் என்ற சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையத்தலைவராகவும் இருந்தவர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினத்தை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைகளை தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்து பாராட்டை பெற்றவர். சிலப்பதிகாரம், மணிமேகலையையும் கல்கி, மகாகவி பாரதியார் எழுதிய சிறுகதைகள் சிலவற்றையும் தேர்ந்தெடுத்து சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அவருடன் ஒரு சந்திப்பு:

உங்களது சம்ஸ்கிருத மொழிப் பயணம் தொடங்கியது எப்படி?

நான் சிறுவயதிலிருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தேன். என் பெற்றோரும் எனக்கு பல சுலோகங்களையும் இலக்கியங்களையும் பயிற்றுவித்தனர்.

தமிழ்தான் தாய்மொழி என்றாலும், சம்ஸ்கிருதத்தை என் இரண்டாவது தாய் மொழி என்று சொல்லலாம். கதைகள் படிக்கும்போது, அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால், உடனே அந்தக் கதையை நான் சம்ஸ்கிருதத்தில் எழுதிப் பார்ப்பேன். அப்போது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அலாதியான திருப்தி கிடைக்கும். பொதுவாக, சம்ஸ்கிருதம் ஒரு கடினமான மொழி என்று ஒரு கருத்து உண்டு. சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவைகளை, வாசித்துக் காட்டும்போது, அதைக் கேட்பவர்கள் மிகவும் பாராட்டுவார்கள். அப்போது சம்ஸ்கிருதம் என்ற விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்னிடம் இருப்பது போல உணர்வேன். பெருமையும், மகிழ்ச்சியும் அடைவேன்.

பன்மொழி புலமை பெற்ற என் பாட்டி, கல்வியின் அவசியத்தை, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திருமணத்துக் குப் பிறகு என் கணவரும் ஊக்குவித்தார்.

சிறுவயதிலேயே எனக்கு 'ராமாயண ஹரி கதா' நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கம்பன், துளசிதாஸ், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற பல வடிவங்களில் ராமாயணத்தை அறிந்தேன். இதுவே பின்னாளில் சம்ஸ்கிருதம், தமிழ் இரு மொழிகளுக்கு இடையிலும் மொழிபெயர்ப்புப் பணியில் என்னை ஈடுபடுத்தியது.

சம்ஸ்கிருதம் ஒரு 'புழக்கத்தில் இல்லாத மொழி' என்ற விமர்சனம் குறித்து?

Dinamani Cuddalore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Cuddalore

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size