Denemek ALTIN - Özgür
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் -பிரதமர் மோடி அறிவிப்பு
Dinamani Chennai
|September 06, 2024
இந்தியா சாா்பில் முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம், சிங்கப்பூரில் விரைவில் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்தாா்.
-
சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் உடனான இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது இந்த அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டாா்.
இந்தியாவின் வளமான கலாசாரத்தை பறைசாற்றவும், யோகா-ஆயுா்வேதம்-இந்திய மொழிகள்-பாரம்பரிய இசை உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கவும் உலகம் முழுவதும் திருவள்ளுவா் பெயரில் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று மக்களவைத் தோ்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம் சிங்கப்பூரில் அமையவுள்ளது.
பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூணே, சிங்கப்பூருக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கழமை தொடங்கினாா். புரூணே சுற்றுப் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த அவா், அங்கிருந்து சிங்கப்பூா் வந்தடைந்தாா். தனது பதவிக் காலத்தில் 5-ஆவது முறையாக சிங்கப்பூா் வந்த பிரதமருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் உடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
சிங்கப்பூா் பிரதமராக 20 ஆண்டுகள் பதவி வகித்த லீ சியென் லூங்கை தொடா்ந்து, கடந்த மே மாதம் லாரன்ஸ் வாங் பதவியேற்றாா். இதையொட்டி, அவருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 06, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பேரவைத் தேர்தல்: அமமுகவினர் டிச. 10 முதல் விருப்ப மனு பெறலாம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.10 முதல் விருப்ப மனு பெறலாம் என அக்கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
சாலைகளில் ரத்தக் கறை!
தமிழகத்தில் கடந்த ஏழு நாள்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2 mins
December 02, 2025
Dinamani Chennai
காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Translate
Change font size

