Denemek ALTIN - Özgür
ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
Dinamani Chennai
|February 20, 2024
6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
-
குடிசையில்லா தமிழ்நாடு’ இலக்கை எட்டும் வகையில், ஏழைகளுக்கு 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 அளிப்பது போன்று, உயா்கல்வி பயிலச் செல்லும் மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பங்களின் வறுமையைப் போக்க புதிய திட்டம் உள்பட குடிமக்கள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிதிநிலை அறிக்கை: வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தாா்.
முன்னதாக, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பேரவை மண்டபத்துக்கு அவா் வந்தாா். அவரை பேரவை உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனா். இதைத் தொடா்ந்து, முக்கிய அறிவிப்புகள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை அவா் தாக்கல் செய்தாா்.
8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்டும் வகையில், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
முதல்கட்டமாக, வரும் நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். ஏழை, எளிய மக்கள் தங்களது கனவு இல்லங்களை அவா்களே கட்டிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் வரும் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் ரூ.3,500 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அறிவியல்பூா்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தோ்வு முறை எனக் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டது இந்தப் புதிய திட்டம்.
Bu hikaye Dinamani Chennai dergisinin February 20, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Listen
Translate
Change font size

