Denemek ALTIN - Özgür
போர் நிறுத்தம் நிச்சயம் கிடையாது!
Dinamani Chennai
|November 04, 2023
முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பகுதி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளாா்.
-
இஸ்ரேலுக்கும், காஸாவில் ஆட்சி செலுத்திவரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த மாதம் போா் தொடங்கிய பிறகு, அந்தச் சண்டையில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக ஆன்டனி பிளிங்கன் அந்த நாட்டுக்கு அக். 12-ஆம் தேதி வந்தாா்.
இந்த நிலையில், போா் தொடங்கி ஏறத்தாழ 4 வாரங்கள் கழிந்த நிலையில், இஸ்ரேலுக்கு பிளிங்கன் மீண்டும் வெள்ளிக்கிழமை வந்தாா்.
இந்த முறை, காஸாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அங்கு போா் நிறுத்தத்தை அறிவிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவா் நேரில் வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து டெல் அவீவ் நகரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா முழுமையாக மதிக்கிறது.
இருந்தாலும், காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகவும், அவசரமாகவும் உள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாம் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
காஸாவுக்குத் தேவைப்படும் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு இடைக்கால போா் நிறுத்தம் அவசியமாக உள்ளது. இது தொடா்பாக பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினேன் என்றாா் பிளிங்கன்.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.
அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 04, 2023 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நாட்டை விட்டு வெளியேறுங்கள்
வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'
1 min
December 02, 2025
Translate
Change font size

