1998ல் அவரின் இயக்கத்தில் முதல்படமாக வெளிவந்து பலரின் மனதைக் கிறங்கடித்த ‘குச் குச் ஹோதா ஹை’ இப்போதும் கரணை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
பின்னர், ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதுமான ரசிகர்களைக் கவர்ந்தார் கரண். கூடவே படங்கள் தயாரிப்பதும், இயக்குவதும், பிசினஸ் செய்வதும், அதற்கான முதலீடு போடுவதும் எனப் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டார்.
இப்போது சினிமா இயக்குநராகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் கரண் ஜோஹர். இத்தனை ஆண்டுகளில் அவர் சுமார் 50 படங்களைத் தயாரித்துள்ளார். இதில் பத்து படங்கள் அவர் இயக்கத்தில் வந்தவை. இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை; வசூலில் சாதனை படைத்தவை. இந்நேரத்தில் கொஞ்சம் காஃபியுடன், கேஜோ எனச் செல்லமாக அழைக்கப்படும் கரண் ஜோஹர் பற்றிப் பேசலாம்.
1972ம் ஆண்டு மும்பையில் யாஷ் ஜோஹர், ஹிரூ ஜோஹருக்கு மகனாகப் பிறந்தவர் கரண் ஜோஹர். சிந்தி பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை யாஷ் ஜோஹர் 1950களில் இருந்து பாலிவுட்டில் இருப்பவர். முதலில் இந்தி சினிமாவில் விளம்பரம் மற்றும் புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தயாரிப்பாளராக உயர்ந்தார்.
1976ல் ‘தர்மா புரொடக்ஷன்ஸை’ ஆரம்பித்தார். சில வெற்றிப் படங்களைத் தந்தார்.
இதனால், தயாரிப்பாளரின் மகனாக வசதிகளுடனே வளர்ந்தார் கரண். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் வணிகவியல் படித்தார். ‘‘எனது பெற்றோர் நான் சினிமா பிசினஸில் வரக்கூடாது என நினைத்தனர். என் அம்மாவோ எனக்கு நிலையான வேலையும், நிலையான வருமானமும் இருக்கவேண்டுமென ஆசைப்பட்டார்.
சினிமா ஒரு தொழில் அல்ல என்றார். நான் ஆர்ட்ஸ் படிப்பதை அவர் விரும்பவில்லை. அதனாேலயே காமர்ஸ் முடித்தேன். ஒரு நல்ல சிந்து பஞ்சாபி பையனாக அம்மாவின் பேச்சைக் கேட்டேன்...’’ எனச் சிரிக்கிறார் கரண்.
Bu hikaye Kungumam dergisinin 09-02-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 09-02-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ரூ.2 கோடி வேண்டாம்!
நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மானேஜர்களை விட்டு ஏதாவது ஓடிடி தளத்தில் பேசச் சொல்வதுதான்.
ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்.!
இட்லியை குறுக்குவாக்கில் இரண்டு ஸ்லைஸ் ஆக வெட்டி கன்னத்தில் ஒட்டிவைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு கொழுகொழு கன்னங்களோடும் அழகாய் உருட்டிப் பேசும் கண்களோடும் நடித்து அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
விஜய் 69ல் ஹெச். வினோத்?
‘‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்’ என கமல் எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்துச் சென்ற ஹெச். வினோத், இப்போது ‘விஜய் 69’ படத்தை இயக்கப் போவதாக செய்திகள் கசிகின்றன.
சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!
‘தமிழ்’, ‘சாமி”, ‘ஐயா’, ‘தாமிர பரணி', 'சிங்கம்', 'யானை' என பல வெற்றிப் படங்களைத் தந்த முன்னணி இயக்குநரான ஹரி, இப்போது மூன்றாவது முறை யாக விஷாலுடன் இணைந்து ‘ரத்னம்' படத்தை இயக்கியுள்ளார்.
திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா
நடிகர் தீனாவிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ‘கைதி’ படம் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தவர். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் முத்திரை பதித்தவர். இப்போது காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், டயலாக் ரைட்டராகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் வெளியான ‘கள்வன்’ திரைப்படம் ஒரு நடிகராக தீனாவை இன்னும் கவனிக்க வைத்திருக்கிறது.
உலகின் விதைப் பெட்டகம்!
24 மணிநேரமும் சூரியன் இருக்கும் இத்தீவில்தான் உலகின் 13 லட்சம் பயிர் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன!
இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?
‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி
உன்னை விட இந்த உல -கத்தில் ஒசந்தது யாரும் இல்ல...' என்ற 'விருமாண்டி' பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் மத்தாப்பாக வந்து போகும் அசத்தல் அழகி அபிராமி.
மகாபலிபுரம் to சென்னை...
நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.
2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!
ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான்.