‘‘இதோ வரேன்மா...’’ என்றபடி தோட்டத்தில் பறித்த மல்லிகைப் பூக்களை வாழைநாரில் சரமாய்த் தொடுத்து எடுத்துக்கொண்டு ஓடி இரண்டு முழம் அளவுக்கு அழகாய்த் தொடுத்திருந்த பூச்சரத்தை அம்மாவிடம் காட்டிச்சிரித்தாள்.
‘‘அடடே! அழகா கட்டியிருக்கியேடா...’’ என்ற வேதவல்லியிடம், ‘‘கொஞ்சம் இருமா...’’ என்று சொல்லிக்கொண்டே ஒரு சிறிய நாற்காலியை இழுத்துப் போட்டு சுவரில் மாட்டியிருந்த பாட்டி லட்சுமியின் புகைப்படத்திற்கு அந்த பூச்சரத்தை மாலையாகத் தொங்கவிட்டாள்.
வேதவல்லியும் தனது அம்மா லட்சுமியின் புகைப்படத்தின் முன் நின்று கண்கள் கலங்க கும்பிட்டுவிட்டு ‘‘வா கண்ணு போலாம்...’’ என்று சீதாவை அழைத்துக் கொண்டு பூக்கூடையைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
சீதாவும் வீட்டைப் பூட்டிக்கொண்டு உதிரிப்பூக்கள் நிறைந்த இரண்டு சிறிய பைகளை எடுத்துக் கொண்டு கொலுசு அணிந்த தேவதையாக வேதவல்லியின் பின்னால் நடந்தாள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிவன்கோயில் வாசலில் பூக்கடை போட்டிருந்தாள் வேதவல்லி.சீதாவும் பள்ளி விட்டு வந்ததும் வேதவல்லிக்குத் துணையாக பூக்கடையில் இருப்பாள்.அம்மா பூ கட்டும் அழகை ரசித்துப் பார்ப்பாள்.
பிறகு அவளே பூ கட்டவும் ஆரம்பித்து விட்டாள். இப்பொழுது அம்மாவை விட அழகாகவே பூக்களை கட்டவும் தேறிவிட்டாள்.சீதா பிறந்த ஆறு மாதத்திலேயே அவளது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். வேதவல்லியின் அம்மா லட்சுமிதான் தூணாக இருந்து குடும்பத்தை காத்தாள். வேதவல்லி பூக்கடைக்குச் சென்ற பிறகு சீதாவை லட்சுமி பாட்டிதான் கண் போல பார்த்துக் கொண்டாள்.
அதனால் சீதாவுக்கு பாட்டிதான் எல்லாம். தினமும் காலையில் நாலு மணிக்கு எல்லாம் எழுந்து பூக்களைப் பறித்துத் தயார் செய்து ஐந்து மணிக்கு எல்லாம் கிளம்பி விடுவாள் வேதவல்லி.
அதன் பிறகு காலை உணவு தயார் செய்து சீதாவை பள்ளிக்கு அனுப்பும் வேலை லட்சுமி பாட்டியுடையது. பத்து மணிக்கு வேதவல்லி வீட்டிற்கு வருவாள். மீண்டும் மாலை நாலு மணிக்கு பூக்களுடன் கோயிலுக்குக் கிளம்பிவிடுவாள்.
Bu hikaye Kungumam dergisinin 13-10-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 13-10-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ரூ.2 கோடி வேண்டாம்!
நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மானேஜர்களை விட்டு ஏதாவது ஓடிடி தளத்தில் பேசச் சொல்வதுதான்.
ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்.!
இட்லியை குறுக்குவாக்கில் இரண்டு ஸ்லைஸ் ஆக வெட்டி கன்னத்தில் ஒட்டிவைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு கொழுகொழு கன்னங்களோடும் அழகாய் உருட்டிப் பேசும் கண்களோடும் நடித்து அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
விஜய் 69ல் ஹெச். வினோத்?
‘‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்’ என கமல் எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்துச் சென்ற ஹெச். வினோத், இப்போது ‘விஜய் 69’ படத்தை இயக்கப் போவதாக செய்திகள் கசிகின்றன.
சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!
‘தமிழ்’, ‘சாமி”, ‘ஐயா’, ‘தாமிர பரணி', 'சிங்கம்', 'யானை' என பல வெற்றிப் படங்களைத் தந்த முன்னணி இயக்குநரான ஹரி, இப்போது மூன்றாவது முறை யாக விஷாலுடன் இணைந்து ‘ரத்னம்' படத்தை இயக்கியுள்ளார்.
திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா
நடிகர் தீனாவிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ‘கைதி’ படம் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தவர். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் முத்திரை பதித்தவர். இப்போது காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், டயலாக் ரைட்டராகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் வெளியான ‘கள்வன்’ திரைப்படம் ஒரு நடிகராக தீனாவை இன்னும் கவனிக்க வைத்திருக்கிறது.
உலகின் விதைப் பெட்டகம்!
24 மணிநேரமும் சூரியன் இருக்கும் இத்தீவில்தான் உலகின் 13 லட்சம் பயிர் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன!
இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?
‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி
உன்னை விட இந்த உல -கத்தில் ஒசந்தது யாரும் இல்ல...' என்ற 'விருமாண்டி' பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் மத்தாப்பாக வந்து போகும் அசத்தல் அழகி அபிராமி.
மகாபலிபுரம் to சென்னை...
நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.
2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!
ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான்.