வானம் இருண்டு கொண்டிருந்தது. காற்று குளிர்ந்து வீசியது. கிருஷ்ணா வானத்தை பார்த்தாள். 'தலைக்கு மேல் வேலை உள்ளது. இந்த நிலையில் மழை வந்தால் இதுவரை செய்து வைத்த எல்லா வேலைகளும் கெட்டுவிடும்' என்று கவலைப்பட்டாள்.
''கிருஷ்ணா!மழைவர மாதிரிஇருக்கு.'' ராணி பதற்றமாகச் சொன்னாள்.
"உம்! வரட்டும் ராணி!" "என்னது வரட்டுமா? உனக்குப் புத்தி என்னாச்சு? இன்னிக்குள்ளஇந்தப் படப்பிடிப்பமுடிக்கணும்.
அங்கபாருஇயக்குனர! எவ்வளவு பதட்டமாஇருக்கார். இந்த நேரம் மழை வந்தா அவ்வளவுதான்." ராணியின் குரலில் கோபம் கொப்பளித்தது.
இந்த நேரம் அனுமோகன் கத்தினார்.
"ஹேய்! கிருஷ்ணா! ராணி! அங்க என்னபண்றீங்க ?சீக்கிரம்வாங்க.
எல்லாத்தையும் வண்டில அள்ளிபோடுங்க.நனையுது.' இவர்கள் இருவரும் உடனே துரிதமாக செயல்பட்டனர்.
எல்லாம் வண்டிக்கு ஏறின. அதற்குள்ளே எஞ்சி இருந்த சில உதவியாளர்களும் இயங்கினர். நடிகர் நடிகைகள் வீட்டிற்குப் புறப்பட்டு விட்டனர். மழை கொட்டிக் கொண்டிருந்தது.
அனுதலையில் கை வைத்து உட்கார்ந்தான்.
"போச்சு. இன்னிக்குத்தான் கடைசி நாள் படப்பிடிப்பு.
முக்கியமான காட்சி. ஆடை அலங்காரம், நடிகர்கள் நேரம், மத்தது எல்லாம் சரியாஅமைஞ்சது.பாத்துபாத்து தயார் பண்ணினேன். பணம் வீணாபோச்சு. கொஞ்ச நேரம்கழிச்சுமழை வரக்கூடாது.'' வாய்விட்டுப்புலம்பித்தள்ளினான்.
"விடுங்கசார்! மறுபடியும் ஏற்பாடுபண்ணிக்கலாம்.'' அலங்கார நிபுணர் நீலன் தேற்றினார்.
அனு அவரை நிமிர்ந்து பார்த்தான். பின் சட்டைப் பையைத் தடவினான்.
பணத்தை நீட்டி, அவன்கணக்கைக்கழித்தான்.
This story is from the April 24, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 24, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.
விரயமாகும் உணவுகள்.... தடுப்பது எப்படி?
இன்றை நவீன யுகத்தில் பசித்தவனுக்கு உணவு அளிப்பதை விட அதை வீணாக்குவதை சாதாரணமாக செய்வதுதான் வேதனை அளிக்கிறது. நல்ல உணவைச் சமைத்து அதைக் கொட்டுவது என்பது பல்வேறு நாடுகளுக்கும் பழகிப்போன விஷயமாகவே உள்ளது.
வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறேன்!
டாப்ஸி... தன்னம்பிக்கை மிகுந்தவர், விரைந்து தெளிவாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர், தன் கோணங்களை அறிந்தவர், தனக்கு என்ன வேண்டும், எது தேவையில்லை என்பதை வெளிப்படுத்த அஞ்சாதவர்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஐ.ஐ.டி. படித்தாலும் வேலை இல்லை!
அங்கு, ஃபெயில் ஆகாமல் பாஸ் மார்க் எடுக்கவே கடினமாக உழைக்க வேண்டும்.எனவே, 4 வருடங்கள் முடிந்த பிறகு அதிலிருந்து தேர்வான மாணவர்களின் தரமும், சிந்திக்கும் திறனும் மற்ற கல்லூரி மாணவர்களை விட தரமானதாக இருக்கும்.
அதிகரிக்கும் சிசேரியன்...
பிள்ளைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது போன்றது. ஆனாலும், நவீன மருத்துவத்துக்கு முன்பு சுகப்பிரசவத்துக்கு அதிக வாய்ப்பிருந்தது. மக்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடல் உழைப்பு காரணமாக அது நடந்தது.
கிராமத்து ராசாக்கள்
ஊரில் இருந்து கொண்டுக்கிட்டு வந்த காசும் அடுத்த மாசக் கச்சேரிக்கு வாங்கியிருந்த அட்வான்சும் தீர்ந்த பெறகு, இந்தக் கச்சேரிக் குடும்பத்தோட அம்மா சின்னத்தாயி, தன்னோட காதில் போட்டு வச்சிருக்கற தண்டட்டியக் கழற்றி கரியணம்பட்டிகிட்டே அடகு வச்சு மறுபடியும் கச்சேரி செய்ய ஊருக்குத் தள்ளிவிடுவாங்க.
என்னைப் பற்றி..
நான் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூரைச் சேர்ந்தவள். பொறியியல் படித்துள்ள எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அதையே எனது துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
தேர்தல் களத்தில் கங்கனா பன்சூரி!
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த கங்கனா ரணாவத், தனது 16 வயதில் நடிக்க வேண்டும் என்று விரும்பி டெல்லியில் நாடக இயக்குநர் அர்விந்த் கவுரிடம் நடிப்பை கற்றுக் கொண்டார்.
தவிக்கவிடுவது சரியா?
மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். அவன் சுயநலமான விலங்கு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அழகுக்கு அளவு கோல் கிடையாது!
சீதா ராமம் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகையாக மாறி விட்ட நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.