மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்" செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் திருமோகூர் ஊராட்சியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
குறிப்பாக, திருமோகூரில் உள்ள வளையாபதி திருமண மஹாலில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயன் அடைந்து தொழில் முனைவோராக உயர்ந்துள்ள பல்வேறு மகளிர் குழுக்கள் மூலம் அவர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டார்.
அதன்பின்பு, திருமோகூரில் செயல்பட்டு வரும் செம்பருத்தி தையல் தொழில் குழு கூடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு மகளிருடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP) உலக வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் சமுதாயத்தில் நிலையான வளர்ச்சி என்பதை நோக்கமாகக் கொண்ட தனித்துவமிக்க திட்டமாகும். இத்திட்டம் துணை முதலமைச்சர் மேற்பார்வையில் செயல்பட கூடிய சிறப்பு திட்டமாகும்.
இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் 137 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சுய உதவி குழு பெண்கள் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்து உறுப்பினர்கள் முதன்மை பயனாளிகளாக பயன்பெற தகுதி உடையவர்கள், பெண்கள், ஆதிதிராவிட பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
This story is from the December 13, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 13, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது
ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
பாதுகாப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி கண்ணாடி இழை தரைத்தளபாலத்தில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளு வர் சிலை இணைப்பு கண் ணாடி இழை தரைத்தள பாலம் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவி கடந்த 2000 ஆண்டு திறந்து வைத்தார்கள்.
விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது முன்மாதிரி ராக்கெட்டான ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது.
அம்பேத்கர் சிலைக்கு விசிக மாலை
கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை: த.வெ.க. அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அல்லாள இளைய நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள் சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள்.
கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழர் திரு நாளை முன்னிட்டு முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கடையம் தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது.
நெல்லையில் பல்லுயிர்வளம் கருத்தரங்கம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், டோனாவூர் ஃபெலோஷிப் அரங்கில் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்கள்.
மது கடையில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்த நபரை தாக்கிய 4 பேர் கைது
காரைக்கால் கோட்டுச்சேரி மது கடையில் தன்னைத் தானே புகைப்படம் எடுத்த நபரை, தங்களை தான் போட்டோ எடுக்கிறார்கள் என தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏழை எளியோர் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி