தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நீடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிக பட்சமாக 20 செ.மீ. வரை மழை பெய்யும். இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு 'அலர்ட்' விடப்பட்டுள்ளது. மேலும் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி வரை 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
هذه القصة مأخوذة من طبعة May 17, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 17, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஜூன் 6ஆம் தேதி முதல் கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான கண்காட்சி
கோவையிலுள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சியான இன்டெக்-2024, ஜூன் 6ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் சினிமா பானியில் சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்த 17 வயது சிறுவன் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தமிழ் சினிமா பானியில், சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்து, ஆள் நடமாட்டத்தை கண்டு 17 வயது சிறுவன் தப்பி ஓடியதாக, போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவலாக வெளியாகி உள்ளது. மேலும் சிறுவன் கொலையில் தாய்க்கு சம்பந்தமில்லை என எஸ்எஸ்பி மணீஷ் தெரிவித்துள்ளார்.
சேலம் மணிமா மருத்துவமனையில் ஆலோகிராஃப்ட் எலும்பினை பயன்படுத்தி கணுக்கால் மூட்டு அறுவை சிகிச்சை
சேலம் மணிமா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் தீபக் செய்தியாளர்களை சந்தித்தார்.
விவேகானந்தர் மண்டபத்தில் இரண்டாவது நாளாக பிரதமர் மோடி தியானம்
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி.வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்” என பெயர் பெற்ற ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சிகரெட் புகைப்பவரால் கருவில் உள்ள சிசுவும் பாதிக்கும்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் எச்சரிக்கை
நார்வே செஸ் தொடர் 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி சார்பாக ஆறுமுக நாவலர் விளையாட்டு அரங்கில நடைபெற்ற கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.