மனசாட்சியை உறங்க வைத்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 'மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்! இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து இதுவரை 41 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையுடன் தான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.
சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்சம் ரூபாய் வரை கடனாகி அதனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு இறந்து போயிருக்கிறார். " தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு செல்லக்கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கிறது. இதனைத் தடுக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான் இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்தோம். அரசின் சார்பில் அமைத்த இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
This story is from the March 23, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 23, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது.
வரலாறு காணாத விதமாக ரூ.50 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவு இறுதி நாளில் புதுச்சேரியில் 17பேர் வேட்பு மனு
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 25ம் தேதி துவங்கியது.
அறுவை சிகிச்சை மூலம் தாக்குதலில் காயமடைந்த 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவரது முகத்தோற்றத்தையும் மீட்டெடுத்து சாதனை
கமுதியை சேர்ந்த, பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவனை, தெரிந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத் தால் தாக்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தர்மபுரி வருகை
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி தொல்.திருமாவளவன் பேச்சு
சிதம்பரத்தில் நடை பெற்ற தி.மு.க. கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பேசுகையில்:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பல் உற்சவம்
காரைக்கால் வரலாற்று புகழ்மிக்க ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி நேற்று இரவு தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
என்எஸ்எஸ் சிறப்பு பயிற்சி முகாம்
புதுவை பாக்கு முடையான்பேட் இதயா மகளிர் கல்லூரியில் என்எஸ்எஸ் சிறப்பு பயிற்சி முகாம் 7 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கல்லூரி முதல்வர் திபாத்திமா தலைமையில் புதுவை NSSதிட்ட அதிகாரி சதிஷ் குமார் முன்னிலையில் அருள்சகோதரி சமூக ஆர்வளர் குழந்தை தெரேசா,ராஜயோக ஆசிரியர் கவிதா, முனைவர், புபேஷ்குப்தா, பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.
அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை: இந்திய தேர்தல் ஆணையம்
அ.தி.மு.க. கொடி, சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட நாட்களாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18ந்தேதி தீர்ப்பளித்தது.