Facebook Pixel தரவுகள் பேசட்டுமே... | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தரவுகள் பேசட்டுமே...

Dinamani Salem

|

July 10, 2025

கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.

- கோதை ஜோதிலட்சுமி

தமிழ்மொழியும் அதைப் பேசும் மக்களும் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நம்மை வாழ்வித்து வருவதோடு உலகின் மிக மூத்த மொழிகளுள் ஒன்றென நிற்கிறது. இதனால் தான், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமிதம் கொள்கிறோம்.

இலக்கியங்கள் மொழியின் தொன்மையைச் சொல்கின்றன. அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தை நிறுவுவதற்கு கற்பனை கலந்த இலக்கியம் மட்டுமே சான்றாகாது. பிற சான்றுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன.

அகழாய்வு என்பது அறிவியல் அணுகுமுறை கொண்டது. உலகம் முழுவதும் அகழாய்வை ஒப்புக்கொள்வதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும், மானுடவியல் ஆராய்ச்சியாளர்களும் தொன்மையான மனித வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, உலகின் முதல் நூல் என்று சொல்லப்படும் ரிக் வேதம் நம்முடையது. அது 1028 சூக்தங்களில் 10,600 ஸ்லோகங்களைக் கொண்டது. அதிலே பொற்காசுகள், பொன்னாலான ஆபரணங்கள், தங்கம் கிடைத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பை உறுதி செய்யும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வானியல் பற்றிய அறிவியல் இருக்கிறது. ரிக் வேத காலத்தை ஆராய்ந்த ஜெர்மனி அறிஞர் ஜாகோபி கி.மு. 6000 என்று முடிவுக்கு வந்தார்.

உலக நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள், அயல்நாட்டுத் தூதுவர்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. திரைகடல் வணிகம் பற்றிய தகவல்கள், வானியல் குறிப்புகள் இருக்கின்றன. நிர்வாகம், கலைகள், ஆயுதங்கள், அணு முதல் உளவியல் வரையிலான இன்றைய உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிவியலைத் தொல்காப்பியம் என்ற ஒற்றை நூலே பேசிவிடுகிறது. இத்தகைய இலக்கிய வளம் நமது தொன்மையைச் சொல்ல ஏற்கெனவே இருக்கிறது.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Salem

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Salem

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

12 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களால் மக்களின் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Salem

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Salem

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Salem

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Salem

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size