மொத்தம் 29 மக்களவை தொகுதிகளுடன் ஆறாவது பெரிய மாநிலமான இங்கு ஏப்ரல் 19, 26, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பாஜகவின் வியூகம்: நரேந்திர மோடி என்ற தலைமைத்துவத்தை மட்டுமே துணையாகக் கொண்டு இங்கு தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நிலையான அரசு, வளர்ச்சியடைந்த பாரதம், தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் மாநிலத்தில் ஆளும் பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
2014-இல் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமர் வேட்பாளராக மக்களவை தேர்தலை எதிர்கொண்ட நேரத்தில், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 27 இடங்களை பாஜக வென்றது.
அப்போது வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுத்து 2019 தேர்தலில் 28 தொகுதிகளில் வென்று தனது நிலையை ஒரு படி மேம்படுத்திக் கொண்டது பாஜக.
2019 தேர்தலில் பாஜக அலைக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல் நாத் சிந்த்வாரா தொகுதியில் மட்டுமே வென்றார்.
இதைத்தொடர்ந்து 2023-இல் நடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 இடங்களில் 163 இடங்களை பாஜக கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.
இங்குள்ள 29 மக்களவை தொகுதிகளில் 10 பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. "இந்தியா' கூட்டணியின் அங்கமாக காங்கிரஸ் அதன் 28 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. கூட்டணியில் உள்ள சமாஜவாதி கட்சிக்கு ஓரிடத்தை காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது.
ஓபிசி வாக்குகள்: இந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவை முதல்வராக்கியுள்ளது பாஜக மேலிடம். இதன் மூலம் அவர் சார்ந்த பெரும்பான்மை சமூக வாக்குகளை மக்களவைத் தேர்தலில் கவரலாம் என்று அக்கட்சி மேலிடம் நம்புகிறது.
Diese Geschichte stammt aus der April 11, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 11, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு!
உலகின் உயரமான வாக்குச்சாவடியாக ஹிமாசல பிரதேசத்தின் தாஷிகாங்கில் உள்ள வாக்குச்சாவடி விளங்கும் நிலையில், அங்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை
‘கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபா் உயிரிழப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தை தண்டனைக்கான ஒரே அடிப்படையாகக் கருத முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோயில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கிராம மக்கள் சாலை மறியல்
சீா்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு
உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயர்வு
அம்பத்தார் கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
அம்பத்தூர் சிடிஎச்சாலையில் உள்ள விளையாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை
அமெரிக்கா-கனடா மோதல்
வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு
ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும். 19 கிலோ எடைகொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண் டர் விலை சனிக்கிழமை ரூ. 69 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு மூலம் வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை தலைநகர் தில்லியில் ரூ.1,676-ஆகக் குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை
போலீஸ் தடியடி; வாக்குப்பதிவு இயந்திரங்கள் குளத்தில் வீச்சு
வணிகவரித் துறை மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய்
2023-24-இல் ரூ.1,26,005 கோடி
மக்களை ஈர்க்க தவறிவிட்டது ‘இந்தியா' கூட்டணி
‘சந்தா்ப்பவாத ‘இந்தியா’ கூட்டணி, நாட்டு மக்களை ஈா்க்க தவறிவிட்டது; அக்கூட்டணியின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.