திருச்சி, ஜூன் 9: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எத்தகைய உறுதியுடன் இருந்தாரோ, அதே உறுதியுடன் அணை கட்டுவதை எதிர்ப்போம் என்றும் அவர் கூறினார்.
திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். இதையடுத்து, திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
கர்நாடகத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மட்டுமின்றி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகளும் மேக்கேதாட்டுவில் அணை கட்டு வோம் என்றுதான் கூறின. அப்போதும் நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று வரை தமிழக அரசு அதே நிலையில்தான் உள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த நிலையில் மாற்றமில்லை. இதில், எந்தவிதச் சந்தேகமும் வேண்டாம்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.
This story is from the June 10, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 10, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு: ராஜ்நாத் சிங்
தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பிரதமரின் பல பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளன
மக்களவைத் தோ்தல் பிரசாரங்களின்போது பிரதமா் மோடியின் பல பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உள்ளன என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கூச்பிகார் பயணத்தை ரத்து செய்த மேற்கு வங்க ஆளுநர்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது
தேசத்தில் பாஜக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
போராடித் தோற்றது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.
ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தேர்தல் எதிரொலி
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி
மக்களவைத் தோ்தலில், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.
திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் திமுகவினா் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர், தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள்
மக்களவைத் தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் வெள்ளிக்கிழமை வாக்களிக்க உள்ளனா்.
வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம்
வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்படும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.