ரயில் விபத்து நிகழ்ந்த ஒடிஸாவுக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய அமைச்சா் உதயநிதி, விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஒடிஸாவில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகவும் துயரமான சம்பவம். தமிழா்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பாா்கள் என முதலில் செய்தி வந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றோம். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கும் சென்று பாா்த்தோம். அங்கு தமிழா்கள் யாரும் இல்லை என்றனா்.
ஒடிஸாவில் உள்ள அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினோம். எங்கும் தமிழா்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தனா்.
கோரமண்டல் ரயிலில் முன்பதிவு செய்தவா்களில் 128 போ் தமிழா்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணி வரை ஆய்வில் ஈடுபட்டிருந்தோம். பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தொடா்பு கொள்ள வசதியாக, ஒடிஸாவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழா்கள் குறித்த அழைப்புகள் வரவில்லை எனக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவா்கள் தெரிவித்தனா்.
This story is from the June 05, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 05, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஈரானை திருப்பித் தாக்கியது இஸ்ரேல்
தங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் விமானதளம் மற்றும் அணுசக்தி மையங்கள் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் ட்ரோன்களை வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
வெற்றியுடன் குகேஷ் முன்னிலை
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்திய வீரா் குகேஷ், சக இந்தியரான விதித் சந்தோஷை வென்று, மீண்டும் இணை முன்னிலைக்கு முன்னேறியிருக்கிறாா்.
கொல்கத்தாவில் 'பேனா' திருவிழா!
தொடுதிரை சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த எண்ம தசாப்தத்தில், பேனா கடந்த காலத்தின் நினைவாக மாறியிருக்கிறது.
நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்
மக்களவைத் தேர்தல் குறித்து மம்தா
‘ஐஓபி' முன்னாள் மேலாளருக்கு 7 ஆண்டுகள் சிறை; ரூ.15 கோடி அபராதம்
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ.2.14 கோடி மோசடி வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் பெண் மேலாளருக்கு ரூ.15.06 கோடி அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி
‘காங்கிரஸ் தலைவா்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவாா்கள். இடதுசாரி தலைவா்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் பதிலளித்துள்ளாா்.
சந்திரபாபு நாயுடு, புரந்தேஸ்வரி வேட்பு மனு தாக்கல்
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிா்க்கட்சியான தெலங்குதேசம் கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக மாநில தலைவா் டி.புரந்தேஷ்வரி ஆகியோா் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.
காங்கிரஸ் காலாவதியான கட்சி
\"சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டது. விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு'' என்று முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து: ஐ.நா. தீர்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா
பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்கும் தீர்மானத்தை தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.
அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!
மனத்தாலும் சொல்லாலும் உடலாலும் ஒருப்பட்டு நின்று, ஓரறிவுயிா் முதலாக ஐயறிவுயிா் ஈறாக எவ்வுயிா்க்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்னும் அகிம்சைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மனித குலத்தை ஒழுக்க நெறியில் கொண்டு செலுத்த, இந்தியாவில் தோன்றி தொல்காப்பியா் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் வேரூன்றித் தழைத்திருந்த சமயம் சமணம்!