சென்னை, ஆக. 17: சென்னையில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்றும், கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
இதன்மூலம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லாததாகியுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23, ஜூலை 11-ஆம் தேதிக ளில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலராகவும், ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இதை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிட்டது.
அதன்படி நடைபெற்ற வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:
ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்ததாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் வாதிட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரமும் தாக்கல் செய்யப்படவில்லை. குறிப்பாக, இதே இரட்டைத் தலைமை முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்து சுமார் நான்கு ஆண் டுகள் வெற்றிகரமாக அரசை நடத்தியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியின் பல முடிவுகளை எடுத்துள்ளனர். தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட முடிவுகளையும் எடுத்துள்ளனர். அப்படிஇருக்கும்போது, திடீ ரென கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் எவ்வாறு முடிவு செய்தனர்?
This story is from the August 18, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 18, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடி வகுப்பினரின் (எஸ்.டி.) பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.
அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.24) தீா்ப்பளிக்கவுள்ளது.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
கோடை கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ விபத்து தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.
தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை
வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால், மக்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தண்ணீா் பந்தல்களை அதிமுகவினா் அமைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 2005-ஆம் ஆண்டில் தோ்தல் முன்விரோதம் காரணமாக இருவா் கொலையான வழக்கில் தொடா்புடைய 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியர் கைது
கலாக்ஷேத்ரா நடன கல்லூரி முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அந்தக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியா் ஸ்ரீஜித்தை காவல்துறையினா் கைது செய்தனா்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு விசாரணை: நயினார் நாகேந்திரனின் உறவினர் ஆஜர்
தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், தாம்பரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார்.
கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன விவகாரத்தில், அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவா்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.